Shivashankar Master: சிவஷங்கர் மாஸ்டர் குடும்பத்தை ஆட்டி படைக்கும் கொரோனா! மனைவி.. மகனுக்கும் தீவிர சிகிச்சை!

By manimegalai aFirst Published Nov 25, 2021, 4:54 PM IST
Highlights

நடன இயக்குனரும், நடிகருமான தேசிய விருது பிரபலம் சிவசங்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில். இவரை தொடர்ந்து  இவரது மனைவி மற்றும் , மகனுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நடன இயக்குனரும், நடிகருமான தேசிய விருது பிரபலம் சிவசங்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில். இவரை தொடர்ந்து  இவரது மனைவி மற்றும் , மகனுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தேசிய விருது பெற்ற நடன இயக்குனரான சிவ சங்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், கடந்த நான்கு நாட்களாக அவர் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ஆனால் அவரது அவரது மருத்துவத்துக்கான போதிய பணம் இல்லாமல் திண்டாடி வருவதாக அவரது மகன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இவரது சிகிச்சை விவரம் குறித்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, சிவசங்கரின் நுரையீரலில் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது இவரை தொடர்ந்து கோவிட்-19 தொற்று காரணமாக சிவசங்கரின் மனைவி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவரது மூத்த மகனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவசங்கர் மாஸ்டரின் இளைய மகன் அஜய் கிருஷ்ணா, தன்னால் தன்னுடைய குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ. 2.5 லட்சம் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த முடியாததால், திரையுலகை சேர்த்தவர்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்திய தகவல்களின்படி, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு AIG மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்ட, சிவசங்கர் உடல் நிலை குறித்து,  அஜய் கிருஷ்ணா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது பெற்ற நடன இயக்குனரான சிவசங்கர், ஓம்கார் வழங்கிய புகழ்பெற்ற நடன ரியாலிட்டி ஷோவான சேலஞ்ச் மூலம் தொலைக்காட்சி ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமானார். மேலும் கோலிவுட் திரையுலகத்தில் ரஜினி, அஜித், தனுஷ் என பல பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். மேலும்  பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் கூட தமிழில், சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் விஜய்யின் ‘சர்கார்’ போன்ற படங்களில் நடித்திருந்தார்.

கொரோனாவால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிவசங்கர் மாஸ்டரின் உடல் நலம் பெற வேண்டும் என்றும், அவரது மனைவி மற்றும் மகனும் விரைந்து குணமடைய வேண்டும் என, திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு, தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார்கள். அதே போல் இவரது சிகிச்சைக்கு பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

click me!