
நடிகர் சிம்பு கோலிவுட் திரையுலகில் நடித்த நடிகை நயன்தாரா, ஹன்சிகா, மற்றும் பிரபல நடிகர்களின் வாரிசுகளின் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் என்பது நாம் அறிந்தது தான்.
ஆனால் சிம்புவை பொறுத்தவரை செய்தவற்றை எதையுமே அவர் மறுத்ததே இல்லை. நான் தான் செய்தேன் என தன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி, பாராட்டாக இருந்தாலும் சரி அதனை முழு மனதோடு ஏற்றுக்கொள்வார். அதே போல் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் மனிதர்.
இந்நிலையில் இவருக்கும், நடிகை நயன்தாராவிற்கும் 'வல்லவன்' படத்தின் போது காதல் ஏற்பட்டது. இந்த காதலை உறுதி படுத்தும் விதமாக, சிம்பு நயனுக்கு அடித்த நச் லிப்-லாக் முத்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்து வைரலாக பரவியது.
தற்போது இந்த புகைப்படம் வெளியானது எப்படி? என்பது குறித்து சிம்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் ஒருமுறை ‘துபாய் சென்ற போது புது கேமரா வாங்கியதாகவும். அப்போது அந்த புகைப்படம் எடுத்தோம், ஆனால், அதை யாரோ லீக் செய்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் அந்த நிகழ்வு தன்னை மிகவும் பாதித்தது, தன்னால் ஒரு பெண் பெயர் கெடுகின்றதே என்று தான் மிகவும் வருத்தப்பட்டதாகவும், மேலும் எந்த பெண்ணிடமும் அவர்கள் அனுமதியில்லாமல் தொட்டது கூட இல்லை’ என்று கூறியுள்ளார் சிம்பு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.