Simbu"பார்ட்டிக்கு இனி இடமேயில்லை" சைல்டு லைஃபுக்கு திரும்பும் சிம்பு; கதை ரெடி அடுத்து டைரக்டர் ரோல் தான்" !!

By Kanmani PFirst Published Nov 29, 2021, 8:31 AM IST
Highlights

Simbu | "கொரோனா ஊரடங்கின் போது நிறைய கதைகளை எழுதி வைத்துள்ளேன். விரைவில் படம் இயக்குவேன்" என சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு படம் என்றாலே பில்டப் சாங், லிப்லாக் சீன், அரைகுறை ஆடைகளுடன் நடன மங்கைகள், படப்பிடிப்பிற்கு தாமதமாக வருதல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இந்த மோசமான கருத்துக்களுக்கு மாநாடு வெற்றியின் மூலம்  சிம்பு முடிவு கட்டியுள்ளார்.

சிம்புவின்  கால்ஷீட் பிரச்சனையால் இரண்டு வருட காலமாக மாநாடு படம் உருவாவதில் பல தாமதம் ஏற்பட்டது. இதனால் கடுப்பான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படப்பிடிப்பை ரத்து செய்வதாக அறிவித்தார். பின்னர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக மாநாடு முழு உருவம் பெற்றது.

இருத்தும் வெளியாவதில் பல பிரச்சனைகளை சந்தித்த இந்த படம் இறுதியாக கடந்த 25-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்காக சிம்பு 30 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். அதோடு முறையாக படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.

ஆனால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு உண்மையில் வேற லெவலில் இருந்தவர். டிசிப்ளின்,டெடிக்கேஷன் என தன்னை முழுவதுமாக திரைத்துறைக்கு அர்பணித்திருந்தார் சிறுவயது சிம்பு. திரையில் நாயகனாக அறிமுகமான சிறுது காலத்திலேயே இயக்குனர் அவதாரம் எடுத்த சிம்பு  மன்மதன்,வல்லவன், வாலிபன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

பின்னர் தொடர் வெற்றிகளை ருசித்து வந்த சிம்புவின் சமீபத்திய படங்கள் பெரிய வெற்றியை பெற்று தரவில்லை. இதற்கிடையே பீப் பாடல் சர்ச்சை, தயாரிப்பளாருடன் பிரச்சனை ஏற்பட்டதால் சிம்பு படத்திற்கு தடா உள்ளிட்ட பல இடையூறுகளை சந்தித்தார் சிம்பு.

இதையடுத்து ஒரு முடிவுக்கு வந்த சிம்பு திடீரென அதிகரித்த 110 கிலோ எடையை 4 மாத இடைவெளியில் கடின முயற்சியுடன் எடை குறைப்பு செய்து மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பினார்.

இது குறித்து சமீபத்தில் பேசியுள்ள சிம்பு; உடை எடையை குறைக்க பல இரவுகள் பசியுடன் உறங்கியதாகவும், சிறு வயதில் திரையில் மட்டும் முழு கவனம் செலுத்தி வந்த தான் பார்ட்டிக்கு சென்றதில்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் சில நண்பர்கள் சேர்க்கையால் மனம்மாறி எதற்கெடுத்தாலும் பார்ட்டி செய்து பல தருணங்களை இழந்து விட்டதாக கூறியுள்ளார். இனி தனது வாழ்வில் பார்ட்டி என்ற வார்த்தைக்கே இடமில்லை என்று கூறியுள்ள சிம்பு கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல கதைகளை எழுதி வைத்துள்ளதாகவும் விரைவில் பட இயக்குனராக தனது முந்தைய பரிமாணத்திற்கு மாற உள்ளதாக தெரிவித்துள்ளார். 

click me!