
81 வயதாகும் பழம்பெரும் பாலிவுட் நடிகர்அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அவரது குடும்பத்தினரிடம் இருந்து அவருக்கு என்ன ஆனது, என்ன காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வமாக எதுவும் வரவில்லை.
ஆனால் செய்தித்தளங்களில் அமிதா பச்சனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, அமிதாப் உடல்நலக்குறைவு மற்றும் இதய ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்றபோது, இந்த பிரச்சனை கண்டறியப்பட்டு... உடனடியாக அருவி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அட்மிட் ஆவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, தனது X தள பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 'டி 4950- நன்றியுணர்வுடன் எப்போதும்..' என போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாகவே அமிதாப் பச்சன் அடுத்தடுத்து பல உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமிதாப் தனது மணிக்கட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதே போல் கொரோனா தொற்றினாலும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டார். மீண்டும் உடல்நல பிரச்சனைகளை சந்தித்துள்ள பிக் பி விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.