
கன்னட பிரபலம் ரச்சனா நேற்று காலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, நடிகை ரச்சனாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
39 வயதான ரச்சனா பெங்களூருவை சேர்ந்தவர். சினிமா படங்களில் துணை நடிகையாக வலம் வந்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘சிம்பிள் ஆகி ஒன் லவ் ஸ்டோரி’ என்ற கன்னட படத்தில் நடிகர் ரக்சித் ஷெட்டியின் தங்கையாக நடித்து இருந்தார்.
இந்நிலையில் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அப்படி இருக்கும்போது அவர் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ரச்சனா இறந்த செய்தியை அறிந்த கன்னட திரையுலகினர், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.