பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிரியங்கா சோப்ரா... அவரே கூறிய அதிர்ச்சித் தகவல்!

First Published Oct 23, 2017, 2:53 PM IST
Highlights
priyanka chopra talk about sexual harassment


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னுடைய மனதில் பட்ட கருத்தை எப்போதுமே வெளிப்படையாகக் கூறி விடுவார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயின் முன்னாள் மேலாளர், ஐஸ்வர்யா ராயிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹெர்வி வெயின்ஸ்டீன் பற்றி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதே போல் நடிகை பிரியங்கா சோப்ராவும் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது இவரிடம் ஹெர்வி வெயின்ஸ்டீன் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. 

இதுகுறித்து பேசிய அவர் ஹெர்வி வெயின்ஸ்டீன் போல் பல தயாரிப்பாளர்கள் நடிகைகளிடம் நடந்து கொள்வது உண்மைதான். இது போன்று தனக்கும் பல முறை நிகழ்ந்துள்ளது. இப்படி தயாரிப்பாளர்கள் நடிகைகளிடம் நடந்து கொண்டது பாலியல் உறவுக்காக மட்டும் இல்லை, அவர்களை அடக்கி ஆள வேண்டும் என்கிற எண்ணமும்தான் எனக் கூறியுள்ளார்.

தற்போது பாலிவுட்டைத் தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதித்து கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா தற்போது முன்னணி தயாரிப்பாளர் பற்றி இப்படி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

click me!