பிரபல திரை பாடலாசிரியர் மரணம்... தமிழ் திரையுலகம் அதிர்ச்சி..!

Published : Oct 08, 2021, 05:36 PM ISTUpdated : Oct 08, 2021, 05:49 PM IST
பிரபல திரை பாடலாசிரியர் மரணம்... தமிழ் திரையுலகம் அதிர்ச்சி..!

சுருக்கம்

கவிஞர், பாடலாசிரியர் பிறைசூடன் (65) உடல் நலக்குறைவால் காலமானார். 

கவிஞர், பாடலாசிரியர் பிறைசூடன் (65) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் உடல் நலக்குறைவால் கவிஞர் பிறைசூடன் காலமானார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உரைச் சேர்ந்தவர். மறைந்த கவிஞர் பிறைசூடன் 400 திரைப்படங்களில் 1400-க்கும் மேற்பட்ட பாடல்கள்,5000 பக்திப் பாடல்களும் இயற்றியுள்ளார்.1985ல் வெளியான சிறை படத்தில் இடம்பெற்ற ராசாத்தி ரோசாப்பூ பாடல் மூலம் அறிமுகமானவர். செம்பருத்தி திரைப்படத்தில் நடந்தால் இரண்டடி, கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியவர் பிறைசூடன். 

தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றவர். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் , கபிலர் விருதையும் பெற்றுள்ளார். இவர் சில காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் பிறைசூடன் நெசப்பாக்கத்தில் உள்ள தமது இல்லத்தில் காலமானார். இந்த தகவலை அவரது மகன் உறுதி செய்துள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார்த்திக்-ரேவதி உறவை முடிவுக்குக் கொண்டு வர... பஞ்சாயத்தைக் கூட்டிய சாமுண்டீஸ்வரி: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ