
பாகுபலி - 2 படத்தின் இயக்குநர் ராஜமௌலி தன்னை ஏமாற்றிவிட்டார் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
பாகுபலி2 படம் சமீபத்தில் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், அந்தப் படம் மகாபாரதம், ராமாயணத்தின் கலவை என்று ஒருபக்கம் விமர்சனம் வந்துக் கொண்டுதான் இருக்கிறத்உ.
இருந்தும், வசூலையும் வாரிக் குவித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலி தன்னை ஏமாற்றிவிட்டார் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் பேசியதாவது:
“பாகுபலி படம் ஒரு சிறந்த சரித்திரப் படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சத்யராஜும், ரம்யாகிருஷ்ணனும் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் என்னை அழ வைத்துவிட்டது.
ஆனால், இந்தப் படத்தின் இயக்குனர் ராஜமௌலி மீது எனக்கு சில அதிருப்திகள் இருக்கிறது. அவர் நன்றாக தமிழ் பேசுகிறார். தமிழ்நாட்டில் பல நூறு கோடிகளை அப்படம் வசூலித்து வருகிறது.
ஆனால், பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி கூட தமிழ்நாட்டில் எடுக்கப்படவில்லை?
அதேபோல், தமிழ் சினிமா உலகைச் சேர்ந்த ஒரு துணை நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் கூட பாகுபலி படத்தில் பயன்படுத்தப்படவில்லை?
அப்படி நடந்திருந்தால், தமிழ் சினிமாவை நம்பியுள்ள பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும்.
இதை ராஜமௌலி செய்யாதது எனக்கு வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.