
திரையுலகினர் மத்தியிலிருந்து சற்றே மந்தமாகத்தான் கஜா புயல் நிவாரண உதவிகள் வந்துகொண்ட்ருக்கின்றன. இன்னும் விக்ரம், அஜீத்,விஜய்,சிம்பு போன்ற டாப் ஸ்டார்கள் உதவ முன்வராத நிலையில் ‘காற்றின் மொழி’ படத்தயாரிப்பாளர் தனஞ்செயனும் இயக்குநர் ராதாமோகனும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
கடந்த வாரம் ரிலீஸான ‘உத்தரவு மகாராஜா’, ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய இருபடங்களை விட ராதாமோகனின் ‘காற்றின்மொழி’ நல்ல வசூல் செய்துவருகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக வசூலாகும் பணத்தில் ஒவ்வொரு டிக்கட்டும் இரண்டு ரூபாய் வீதம் தமிழகம் முழுவதும் வசூலாகும் பணம் கஜா புயலுக்கு நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை மனதாரப் பாராட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.