நடிகை பாவனா சமீபத்தில் அவருடைய முன்னாள் கார் டிரைவர்ரால் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் திரையுலகில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இந்த நிலையில் தன்னிடமும் ஒருசிலர் தவறாக நடந்து கொண்டதாக 'காதல்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சந்தியா தெரிவித்துள்ளார்.
தி.நகரில் தனியார் நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து நடிகை சந்தியா கலந்து கொண்ட சந்தியா இந்த நிகழ்ச்சியில் பேசியபோது, 'பாவனா தனக்கு நெருக்கமான தோழி என்றும், நடிகை பாவனாவிற்கு அரங்கேறிய சம்பவம் போன்று தன்னிடமும் சிலர் தவறாக நடக்க முயன்றதாகவும், கூறியுள்ளார்.
கூட்டம் அதிகமான இடங்களாக இருந்ததனால் யார் என்று கண்டுகொள்ள முடியவில்லை என்றும், சந்தியா வேதனையுடன் தெரிவித்தார்.
தனக்கு நேர்ந்த துயரத்தை தைரியமாக பாவனா கூறியதால்தான், அந்த சம்பவத்தின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதோடு, வேறு சில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை தற்போது தைரியமாக கூறி வருகின்றனர் என்று தெரிவித்த சந்தியா.
இதுபோல் தங்களுக்கு நேர்ந்த கொடுமையான விஷயங்களை வெளியில் சொல்வதன் மூலம் தவறுகள் குறைய வாய்ப்புள்ளது என கூறினார்.