'பேட்ட’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் ரீலீஸாவது அநியாயம்’ கார்திக் சுப்பாராஜ் கண்ணீர்

By sathish kFirst Published Oct 8, 2018, 10:52 AM IST
Highlights

முதல் ஷெட்யூல் முழுக்கவே ரகஸியம் காக்கப்பட்ட ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. வாரணாசியில் துவங்கி லக்னோவில் நடைபெற்றுவரும் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் தொடர்ந்து லீக்காகி வருகின்றன.

முதல் ஷெட்யூல் முழுக்கவே ரகஸியம் காக்கப்பட்ட ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. வாரணாசியில் துவங்கி லக்னோவில் நடைபெற்றுவரும் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் தொடர்ந்து லீக்காகி வருகின்றன.

முதலில் ஷூட்டிங்கை தூரத்திலிருந்து வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்தான் இத்தகைய காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ், பின்னர் சில ஸ்டில்களை வைத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்கள், அதுவும் படத்தில் பணியாற்றுபவர்கள்தான் இத்தகைய காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை அறிந்து கொந்தளிப்பின் உச்சத்துக்கே போய்விட்டார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ நீங்கள் பணிபுரியும் படத்துக்கு எத்தகைய அநீதி செய்கிறீர்கள் என்று அறியாமலே படத்தின் ஸ்டில்களை வலைதளங்களில் வெள்யிடுகிறீர்கள். இதை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். என்று எச்சரிக்கையுடன் கலந்த வேண்டுகோளை வைத்துவிட்டு ‘அப்படி மீறி வெளிவரும் ஸ்டில்களை முன்னணி பத்திரிகைகள் பிரசுரிப்பது தனக்கு இன்னும் வேதனையைத்தருகிறது’ என்கிறார்.

அப்படி வெளியாகுற ஸ்டில்களை பத்திரிகைகள் வெளியிடாம இருக்கணும்னா நீங்கதான் அந்தப் பத்திரிகையோட எடிட்டர் சீட்ல உட்காரணும். வாங்க பாஸ்.

click me!