19 ஆண்டுகளுக்குப் பிறகு... மீண்டும் திரையுலகிற்கு வரும் சூப்பர் ஹிட் பட இயக்குநர்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 14, 2021, 10:55 PM IST
19 ஆண்டுகளுக்குப் பிறகு... மீண்டும் திரையுலகிற்கு வரும் சூப்பர் ஹிட் பட இயக்குநர்...!

சுருக்கம்

தற்போது மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகியுள்ளார். அவர் இயக்கும் புதிய படத்தில் புதுமுக நாயகன் கிஷோர் நடிக்க உள்ளார். 

பிரபல நடிகர், நடிகைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுப்பது போலவே காதல் படங்களால் 90’ஸ் கிட்ஸ்களின் இதயம் கவர்ந்த பிரபல இயக்குநர் மீண்டும் கோலிவுட்டில் ரீ-என்ட்ரீ கொடுக்கப்போறாராம். ‘இதயம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். இந்த முரளி, ஹீரா, சின்னி ஜெயந்த், சில்க் சுமிதா, மனோரமா உள்ளிட்ட நடித்திருந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

இதையடுத்து ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ போன்ற படங்களை இயக்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2002ம் ஆண்டு இவர் தமிழில் இயக்கிய காதல் வைரஸ் திரைப்படம் தோல்வியை தழுவியது. அதன் படங்களை இயக்குவதில் இருந்து விலகி இருந்தார். 

இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகியுள்ளார். அவர் இயக்கும் புதிய படத்தில் புதுமுக நாயகன் கிஷோர் நடிக்க உள்ளார். ஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!