நாக தோஷம், ராகு-கேது தோஷம் நீங்க .. இன்று இதை செய்யுங்கள் போதும்!

By Kanmani PFirst Published Aug 2, 2022, 11:53 AM IST
Highlights

தாய் மற்றும் மகன்களுக்கு இடையேயான அன்பையும் பாசத்தையும் அதிகரிக்க இன்னாள் அனுசரிக்கப்படுகிறது. ஆகவே  தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் சிறப்பாக இருக்க கருடனை இன்று வழிபட வேண்டும்.

நாக தோஷம் எப்படி ஏற்படுகிறது ?

கருட பஞ்சமி மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் கருடனை வழிபடுவதன் மூலம் நாக தோஷம், ராகு- கேது தோஷங்களில் இருந்து விடுபடலாம். ஒருவரது ஜாதகத்தில் நாக தோஷம் இருந்தால் அவர்களுக்கு குழந்தை பேறு கிடைப்பதில் தடை ஏற்படும். ஜோதிடத்தின் படி நாகதோஷம் என்பது திருமண ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகு இருப்பதால் நாக தோஷம் ஏற்படுகிறது. அதுபோலவே 1, 2, 5, 7, 11 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது அமைந்திருப்பதாலும் திருமணம் அல்லது குழந்தை பேறு ஏற்படுவதில் சிக்கல் நீடிக்கும். இந்த தோஷங்களை போக்குவதற்கு உகந்த நாளாக கருட பஞ்சமி திகழ்கிறது. 

கருட காயத்ரி மந்திரம் :

புராணங்களின்படி கருடன் ஒருவரை அனைத்து வகையான நாகதோஷங்களில் இருந்தும் விடுவிக்கும் சக்தியை கொண்டவர் என கூறப்படுகிறது. எனவே கருட பஞ்சமி அன்று கருடனை மகிழ்விக்க கருட காயத்ரி மந்திரம், கருட தண்டகம், கருட கவசம் போன்றவற்றை சொல்வது நல்லது. 

மேலும் செய்திகளுக்கு...Thali Peruku: ஆடிப்பெருக்கு நாளில் புதுத் தாலி ஏன் மாற்றப்படுகிறது..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கோ...

கம்! கணபதயே! நமஹ! 
ஓம்! ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ! 
ஓம்! நமோ! பகவதே! வாசுதேவாயா! 
ஓம்! ஹாம்! ஹனுமதே! ஸ்ரீராம தூதாய நமஹ! 
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி 
தன்னோ கருட பிரச்சோதயாத்

மேலும் செய்திகளுக்கு...Rahu Peyarchi 2022: ராகுவால் உண்டாகும் சிறப்பு மாற்றம்..ஆக்ஸ்ட் 10 வரை உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்...

கருட பஞ்சமி எப்போது ?

ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதி அதாவது நாகசதுர்த்திக்கு மறுநாள் வரும் கருட பஞ்சமி மிகவும் விசேஷமானது. இந்த ஆண்டு கருட பஞ்சமி ஆகஸ்ட் 02 அதாவது இன்று செவ்வாய்க்கிழமை வருகிறது. கருட பஞ்சமி நாளானது தோஷங்களை போக்கும் பரிகாரங்களை மேற்கொள்ள உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் கருட காயத்ரி மந்திரம் சொல்வது அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுவிக்கும் உபாயமாக இருக்கும். மேலும் இந்த மந்திரங்களை தினமும் 108 முறை சொல்லி வந்தால் கருடனின் அருள் கிடைக்கும். இந்த கருட மந்திரங்களை ஒருவர் சுக்லபட்சத்தில் வளர்பிறை பஞ்சமி திதி தொடங்கி தினமும் 1008 முறை என 108 நாட்கள் சொல்லி வந்தால் அந்த நபர் 12 தலைமுறைக்கான சித்திகளை பெறுவார் என நம்பப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...Budhan Peyarchi: இன்று புதன் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் வாழ்கை...சூரியனைப் போல் பிரகாசிக்கும்..

கருட பஞ்சமி நன்மைகள் :

அதோடு அனைத்து வகையான நாகதோஷம் கால சர்ப்ப தோஷம், ராகு தோஷம் கேது தோஷம் துரதிஷ்டங்களில் இருந்து விடுபட்டு நல்ல ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி, திருமண வாழ்க்கையைப் பெறவும்,  ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கவும் இந்த மந்திரம் சிறந்த பலன்களை அள்ளித் தருகிறது. அதேபோல பாம்புகள் மற்றும் பிற விஷ ஜந்துக்களின் பயம் நீங்கும், கண்திருஷ்டி சூனியம் பிறை எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும் சர்ப தோசத்தால் ஏற்படும் நோய்கள் கவலைகள் அனைத்திலும் இருந்து விடுபடுவீர்கள் புகழ், பெயர், செல்வம், தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். பாம்புகள் பற்றிய பயம் நீங்க, வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிப்பதற்கு கருட பஞ்சமி பலத்தை கொடுக்கிறது. 

கருட பஞ்சமி ஏன் கொண்டாடப்படுகிறது ?
 

கருடனுக்கு அவரது தாயாரான வினிதாவுக்கும் இடையே உள்ள முடிவில்லாத பிணைப்பை காட்ட கருட பஞ்சமி கொண்டாடப்படுவதாக ஐதீகம். தாய் மற்றும் மகன்களுக்கு இடையேயான அன்பையும் பாசத்தையும் அதிகரிக்க இன்னாள் அனுசரிக்கப்படுகிறது. ஆகவே  தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் சிறப்பாக இருக்க கருடனை இன்று வழிபட வேண்டும்.

கருடனின் அருள் பெற்றவர்கள் அனைத்து வகையான செல்வங்களையும் ஆரோக்கியங்களையும் வெற்றிகளையும் பெறுவர். மேலும் கருடன் விஷ்ணுவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் விஷ்ணு பகவானின் பக்தர் அனைவருக்கும் இவரை பூஜிப்பது வழக்கம். அனைத்து அருளும் கிடைக்க கருட பஞ்சமி வாழ்த்துக்கள்...

click me!