
தளபதி விஜய், விஜயகாந்த் மரணம் குறித்த தகவலை அறிந்ததுமே... ஹைதராபாத்தில் நடந்து வந்த 'தளபதி 68-ஆவது' படப்பிடிப்பில் இருந்து, விஜய் சென்னை திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் விஜயகாந்தின் பூத உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து இன்றைய தினம் தன்னுடைய அரசியல் பணியில் ஆர்வம் செலுத்த துவங்கியுள்ளார்.
Shanmuga Pandian: விஜயகாந்த் இறப்புக்கு பின்னர்... எமோஷ்னலாக ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு!
சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தன்னுடைய கையால் நிவாரண பொருட்களை வழங்க விஜய் ஏற்பாடு செய்திருந்த நிலையில், இதில் ஏராளமான பெண்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் வீட்டை இழந்த மக்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. அதே போல் மழையால் உயிரிழந்த குடும்பத்திற்கு, 1 லட்சம் நிதியை அள்ளிக்கொடுத்தார் தளபதி. சமீப காலமாகவே அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், அதற்கான முன்னெடுப்பாகவே இப்படி பட்ட உதவிகளை செய்து வருவதாக பார்க்காடுகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.