- Home
- Gallery
- Shanmuga Pandian: விஜயகாந்த் இறப்புக்கு பின்னர்... எமோஷ்னலாக ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு!
Shanmuga Pandian: விஜயகாந்த் இறப்புக்கு பின்னர்... எமோஷ்னலாக ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு!
கேப்டன் விஜயகாந்த் மரணத்தின் துக்கத்தில் இருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் போட்டுள்ள உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.

Captain Vijayakanth
தமிழ் திரை உலகில், முன்னணி கதாநாயகனாக இருந்து, பின்னர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தேமுதிக என்கிற கட்சியை துவங்கி, வெற்றிகரமாக வழி நடத்தியவர் விஜயகாந்த். அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்து, மிகப்பெரிய வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்ற விஜயகாந்த், பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எதிர்க்கட்சியாக செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
vijayakanth
முதல்வராக இருக்க கூடிய அணைத்து தகுதிகளும் கொண்ட, சிறந்த தலைவராக பார்க்கப்பட்ட விஜயகாந்த், கடந்த சில வருடங்களாகவே உடல் நல குறைவு காரணமாக கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல் முழு ஓய்வில் இருந்தார். இதனால் இவரது கட்சியும் பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில் நிமோனியா பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு... மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து, டிசம்பர் 27-ஆம் தேதி, சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும்... சிகிச்சை பலனின்றி 28-ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
இவரது இறுதி சடங்கு நேற்று நடந்த நிலையில்... ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியதோடு... இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மேலும் விஜயகாந்தின் உடல், 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க... தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பிரபலங்களும், அரைசியல்வாதிகளும் தொடர்ந்து விஜயகாந்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வந்த நிலையில், தற்போது விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்...உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்த பதிவில் கூறியுள்ளதாவது, "உங்களின் இதயபூர்வமான இரங்களுக்கு எங்களின் நன்றிகள். மக்களின் இந்த ஆதரவு அனைத்துமே எங்களின் தந்தை எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதையும், எப்படிப்பட்ட அன்பை சம்பாதித்திருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. இந்த இழப்பில் இருந்து நாங்கள் மீண்டு வரும் இந்த கடுமையான நேரத்தில், உங்களின் இந்த ஆதரவு எங்கள் குடும்பத்திற்கு ஆறுதலை கொடுத்துள்ளது. என விஜயகாந்தின் மகன் கூறியுள்ளார்.