படிச்சது 10 வது... வயசு 21 ! டிக்டாக் ஆபாச கன்னியை கடுப்பேற்றிய அந்த கேள்வி? மைக்கை கழட்டி போட்ட இலக்கியா!

By manimegalai aFirst Published Mar 18, 2020, 6:36 PM IST
Highlights

திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலருக்கு, வரப்பிரசாதமாக அமைத்தது, டப் மேஷ், டிக் டாக் போன்ற ஆப்புகள். இதன் மூலம் பட வாய்ப்புகள், மற்றும் சின்னத்திரையில் கூட சில நடிகர்களாக மாறியுள்ளனர். அதே நேரத்தில் எல்லோருக்குமே பட வாய்ப்புகள் எளிதில் கிடைத்து விடுகிறதா? என்றால் அது சந்தேகமே.
 

திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலருக்கு, வரப்பிரசாதமாக அமைத்தது, டப் மேஷ், டிக் டாக் போன்ற ஆப்புகள். இதன் மூலம் பட வாய்ப்புகள், மற்றும் சின்னத்திரையில் கூட சில நடிகர்களாக மாறியுள்ளனர். அதே நேரத்தில் எல்லோருக்குமே பட வாய்ப்புகள் எளிதில் கிடைத்து விடுகிறதா? என்றால் அது சந்தேகமே.

அந்த வகையில் திரைப்படத்தில் நடித்து சாதிக்க வேண்டும் என, 10 வது மட்டுமே படித்து முடித்த கையோடு, சென்னை வந்தவர் இன்று  டிக் டாக் செயலியில் ஆபாசத்தை அல்லி தெறித்து வரும் இலக்கியா.

மேலும் செய்திகள்: படவாய்ப்பு தருவதாக குஜால் செய்துவிட்டு கழட்டி விட்ட இயக்குனர்கள்! அடுத்த ஸ்ரீரெட்டியாக மாறிய இலக்கியா!
 

இவரின் தற்போதைய வயது 21 தான்.  அளவுக்கு அதிகமாக ஆபாசத்தை காட்டி, விமர்சனங்களையும் பெற்று வரும் இலக்கியா, ஆபாச சாட் செய்வதாக  சிலர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி பணம் பறித்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மேலும் செய்திகள்: தோல்வி படங்களை கொடுத்தாலும் டாப் ஹீரோ இடத்தை பிடித்த நடிகர்! Most Desirable Men 2019 பட்டியல் இதோ!
 

இந்நிலையில், இவர் இந்த பிரச்சனை குறித்து இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், தன்னை பட வாய்ப்புக்காக சிலர் பயன்படுத்தி கொண்டுள்ளதாகவும், சிறிய சிறிய படங்களில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் பற்றி நேரடியாக கூட சிலர் தன்னிடம் கேட்டுள்ளதாக கூறினார்.

மேலும் இவரிடம் நீங்கள் தொடர்ந்து ஆபாசமாகவே டிக் டாக் செய்து வெளியிடுவதால், ஆபாச படத்தில் நடிக்க அணுகினார்களா ? என கேள்வி எழுப்பியதற்கு, இந்த கேள்வி அவசியம் இல்லாதது என மைக்கை கழட்டி விட்டு வெளியே செனறார்.

பின் அவரை சமாதான படுத்தி, அந்த ஊடகம் மீண்டும் தங்களுடைய கேள்விகளை தொடர்ந்தது. அதே போல் இனி இது போன்ற கேள்வியை முன் வைத்தால் நான் பேட்டி கொடுக்க முடியாது என கூறிய பின்னரே பேச தொடர்ந்தார் இலக்கியா.  

click me!