செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடும் சர்ச்சை இயக்குநர்...’இனி செக்ஸ் படமே எடுக்கமாட்டாராம்’...

By Muthurama LingamFirst Published Apr 5, 2019, 2:05 PM IST
Highlights

தொடர்ந்து சர்ச்சைப் படங்களை மட்டுமே இயக்கியவரும் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் சாபங்களை வாங்கிக் கட்டிக்கொண்டவருமான இயக்குநர் சாமி தனது அத்தனை  பாவங்களுக்கும் பிராயச்சித்தமாக ‘நல்ல படம்’ ஒன்றை இயக்கிக்கொண்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தொடர்ந்து சர்ச்சைப் படங்களை மட்டுமே இயக்கியவரும் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் சாபங்களை வாங்கிக் கட்டிக்கொண்டவருமான இயக்குநர் சாமி தனது அத்தனை  பாவங்களுக்கும் பிராயச்சித்தமாக ‘நல்ல படம்’ ஒன்றை இயக்கிக்கொண்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீகாந்த், சங்கீதா நடித்த ‘உயிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சாமி, அடுத்து ‘மிருகம்’ என்ற படத்தை இயக்கினார். முதல் படத்தில் கொழுந்தன் மீது ஆசைப்பட்ட அண்ணி, இரண்டாவது படத்தில் ஒரு எய்ட்ஸ் நோயாளியின் காமவெறி என்று சர்ச்சைகளை வைத்தே வெற்றி பெற்ற சாமி அடுத்து ராஜ்கிரண், ஆதி காம்பினேஷனில் ‘சரித்திரம்’ என்ற படத்தை இயக்கினார். 90 சதவிகிதம் முடிந்த அப்படம் ஓவர் சாமியாட்டத்தால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

அடுத்து அமலாபால், ஹரிஷ் கல்யாண் நடிக்க ‘சிந்து சமவெளி’ படத்தை இயக்கிவெளியிட்டார் சாமி. மாமனாரை விரட்டி விரட்டி மருமகள் காமம் கொள்ளும் அப்படம் பெரும் கண்டிப்புகளைச் சந்தித்து அவரை வெளியே தலைகாட்டவிடாமல் செய்தது. அடுத்து அவர் இயக்கிய ‘கங்காரு’ நீ படம் எடுத்தது போதும் கொஞ்ச நாளைக்கு சும்மா இரு’ என்று சொன்னது.

இந்நிலையில் ‘என் பாவக்கணக்குக்கு பட்டியல் போட்டால் சொல்ல நடுங்குதம்மா’ என்ற முடிவுக்கு வந்த சாமி, அத்தனை பாவங்களுக்கும் பிராயச்சித்தமாக,பல சர்வதேச விருதுகளை வென்ற ’சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’[1997] என்ற இரானியப் படத்தின் உரிமை பெற்று இயக்கிக்கொண்டிருப்பதாகத் தகவல். இப்படத்துக்கு ‘அக்காக் குருவி’ என்று பெயர் வைத்திருக்கிறார். முன்னணி மலையாள ஒளிப்பதிவாளரும் ‘சிந்து சமவெளி’படத்தின் ஒளிப்பதிவாளருமான உத்பல் நாயனாரே இப்படத்திலும் தன் கைவண்ணத்தைக் காட்டுகிறார்.

click me!