
கடந்த 2013 ஆம் ஆண்டில் உருவாக துவங்கிய திரைப்படம் தான் துருவ நட்சத்திரம், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், முதலில் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா தான் நடிக்க இருந்ததாகவும். அதன் பிறகு சில பிரச்சனைகளால் அவர் படத்தில் இருந்து விலகிய நிலையில், 2015ம் ஆண்டு தான் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் இணைந்ததாகவும் சில தகவல்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே.
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கி சுமார் 90 சதவீத வேலைகள் முடிந்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த திரைப்படம் மேற்கொண்டு நகராமல் அப்படியே நின்று போனது. அதன் பிறகு பல போராட்டங்களை சந்தித்து, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களே தனது சொந்த தயாரிப்பில் இந்த திரைப்படத்தை வெளியிட முடிவு செய்தார்.
இந்நிலையில் படத்தின் ஒட்டுமொத்த பணிகள் முடிக்கப்பட்டு, இன்று நவம்பர் 24ஆம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட து. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் சார்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், அவை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தற்பொழுது துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவது மீண்டும் தள்ளிப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் வெளியிட்ட பதிவில் "என்னை மன்னித்து விடுங்கள், இன்று துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவில்லை. இன்னும் ஓரிரு நாட்கள் எங்களுக்கு அவகாசம் கொடுங்கள், நிச்சயம் இந்த திரைப்படம் உங்களுடைய பார்வைக்காக திரையரங்குகளில் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.