தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் மரணம்.... கடும் சோகத்தில் இயக்குநர் பாரதிராஜா..!

Published : Jun 13, 2020, 03:34 PM IST
தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் மரணம்.... கடும் சோகத்தில் இயக்குநர் பாரதிராஜா..!

சுருக்கம்

ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் பாரதி ராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர். அவரது மறைவால் திரையுலகிலனர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் தமிழ், மலையாளம் என பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் இளைய சகோதரரும் ஆவார். இவர்  இயக்குநர் பாரதிராஜா உடன் இணைந்து நிழல்கள் , காதல் ஓவியம், புதுமைப் பெண், முதல் மரியாதை,  கிழக்குச் சீமையிலே  என பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 2001ஆவது ஆண்டில் வெளியான கடல் பூக்கள் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாரம் விருதினை வென்றார்.

 
 
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் உடல்நலகுறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டர் மூலமே இவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன் அவர் மரணமடைந்துள்ளார். 

ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் பாரதி ராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர். அவரது மறைவால் திரையுலகிலனர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!
சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!