யோவ்! உன் ரசிகர்களுக்கு முதல்ல அறிவுரை சொல்லுயா? விஜயை கலாய்த்த காமெடி நடிகர்!

By manimegalai aFirst Published Oct 5, 2018, 11:32 AM IST
Highlights

சர்கார் பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அறிவுரை சொல்லி குட்டிக் கதை கூறிய நிலையில் முதல் உங்கள் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள் என்று பிரபல காமெடி நடிகர் கருணாகரன் கலாய்த்துள்ளார்.  

சர்கார் பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அறிவுரை சொல்லி குட்டிக் கதை கூறிய நிலையில் முதல் உங்கள் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள் என்று பிரபல காமெடி நடிகர் கருணாகரன் கலாய்த்துள்ளார்.  

துப்பாக்கி, கத்தியைத் தொடர்ந்து நடிகர் விஜயும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைந்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள சர்கார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தி அன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மேடையில் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சில் அரசியல் நெடி ஓவர் டோசாக இருந்தது. 

மேலும் அரசியல் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் குட்டிக் கதை ஒன்றைக் கூறினார். மேலும் கடுப்பேற்றுபவர்களிடம் கம்முனு இருக்கனும் என்றும் வசனம் பேசினார் விஜய். இந்தக் கதையும், வசனமும் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கு வார்த்தைப் போர் தொடங்க காரணமாய் மாறி இருக்கிறது. 

நடிகர் கருணாகரன், விஜய் பேசியதை வைத்து ஒரு ட்வீட் போட்டுள்ளார் ,அந்த பதிவில், குட்டிக் கதை எல்லாம் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தானா. என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதை தங்கள் ரசிகர்கள் மற்றும் ரசிகைகளிடம் சொல்லுங்கள், அவர்கள் கேட்கிறார்களா? என்பதையும் கவனியுங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார். யாரையும் தரக்குறைவாக பேசவும், வெறுக்கவும் வேண்டாம் என்று ரசிகர்களிடம் கூறுங்கள் என்றும் கருணாகரன் தெரிவித்திருந்தார். இவரது பதிவால் கொதிப்படைந்த விஜய் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் கருணாகரனை வறுத்தெடுத்து வருகின்றனர்.   

ஆனால் இதற்கெல்லாம் கலங்காத கருணாகரன், ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே கூறி மீண்டும் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளார். திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சொன்ன, கடுப்பேற்றினால் கம்முனு இருக்கனும் அப்பதான் வாழ்க்கை ஜம்முனு இருக்கும். என்ற வார்த்தை தான் அது. இந்தப் பதிவை விஜய்க்கும் கருணாகரன் டேக் செய்துள்ளார். 

கருணாகரனை ஆந்திராவில் பிறந்தவர் என்று கூறி ரசிகர்கள் மல்லுக் கட்டியதால் அதற்கு பதில் அளித்த கருணாகரன், தம்பி, என் தந்தை இந்திய ராணுவத்தின் உளவாளியாக நாட்டுக்கு என்னென்ன செய்துள்ளார் என்ற சான்றிதழை பதிவிடுவதாகத் தெரிவித்தார். தங்களைப் போன்று போலி பயனர் ஐடிகள் மூலம் இவ்வாறு அபத்தமாக கருத்துகளை தெரிவிக்கும் உங்களைப் போன்ற ரசிகர்கள் தான் தாம் நடிகர் விஜயை வெறுக்கக் காரணம் என்றும் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

click me!