வாய தொறந்தாலே பொய்... பெற்றோர் பற்றியே அவதூறாக பேசிய நாடியாவை நாறடித்த மலேசிய தமிழர்..!

By manimegalai aFirst Published Oct 17, 2021, 12:49 PM IST
Highlights

'பிக்பாஸ்' (Biggboss) நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சொந்த கதை, சோக கதைகளை போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்தவகையில் நாடியா சாங் (Nadiya Chang) சொன்னது அத்தனையும் பொய் எனக்கூறி மலேசிய தமிழர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது, தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சொந்த கதை, சோக கதைகளை போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்தவகையில் நாடியா சாங் சொன்னது அத்தனையும் பொய் எனக்கூறி மலேசிய தமிழர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது, தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: 'மெட்டி ஒலி' சீரியல் நடிகை உமா மகேஸ்வரி திடீர் மரணம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். முதல் வாரத்திலேயே திருநங்கை போட்டியாளரான 'நமிதா மாரிமுத்து' உடல்நலக்குறைவு காரணமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது வாரத்தில், மலேசியா மாடலும், சோசியல் மீடியா பிரபலமுமான நாடியா வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில்தான் நாடியா பேசியது அனைத்தும் பொய் எனக்கூறி மலேசிய தமிழர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். நாடியா சாங்  தன்னைப் பற்றி கூறும் போது, மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததாகவும், தங்கள் வீட்டில் ஒரு அறைதான் இருந்ததாகவும், 15 வயது வரை மெத்தையில் நான் உறங்கியது இல்லை, அம்மா மிகவும் கண்டிப்பானவர். அப்பா மது அருந்துபவர். அம்மா பலமுறை எங்களை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். எனவே நானும் என் சகோதரிகளும், பலமுறை வீட்டிலிருந்து தப்பிப்பதற்காக வீட்டை விட்டு ஓடி பொய் இருக்கிறோம் என கூறினார்.

மேலும் செய்திகள்:இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

 

ஒருமுறை தன்னுடைய அம்மா போலீசாரிடம் தன்னை அடிவாங்க வைத்த போது அவர் மீது வெறுப்பு வந்ததாகவும் கூறினார். மேலும் தன்னுடைய 15வது வயதிலேயே ஹோட்டல் ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்ததாக தெரிவித்தார். அப்போதுதான் தன்னுடைய கணவர் தன்னை பார்த்து காதலித்து, என் பெற்றோரிடம் பேசினார். அம்மா என்னை மீண்டும் அடித்ததால், என்னை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டதாகவும் கணவர் தன்னுடைய வாழ்வில் வந்த பின்புதான் தன்னுடைய வாழ்வில் ஏற்றம் வந்ததாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்: வாவ்... வேற லெவல்... சமூக வலைத்தளத்தை கலக்கும் 'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டே பிறந்த நாள் போட்டோஸ்!!

இதுகுறித்து தற்போது மலேசிய தமிழர் ஒருவர் நாடியா சொல்வது அனைத்தும் பொய், கூறியது மட்டும் இன்றி... "எங்களையெல்லாம் பார்ப்பதற்கு உங்களுக்கு எப்படி தெரிகிறது? பைத்தியக்காரன் போல் இருக்கிறதா? எது சொன்னாலும் கேட்டுக் கொண்டு பேசாமல் இருப்போம் என்று நினைத்தீர்களா... சரி மலேசியாவில் இருந்து ஒரு தொலைக்காட்சிக்கு நிகழ்ச்சிக்கு ஒரு பெண் சென்றுள்ளார். எனவே நல்லதோ, கெட்டதோ, அவருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒட்டுமொத்த மலேசிய மானத்தையும் வாங்கி இருக்கிறார் நாடியா என ஆவேசமாக பேசியுள்ளார்.

18 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு யாரும் தரமாட்டார்கள். அதுவும் ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்ததாக கூறுகிறார். அதேபோல் உங்களை போலீசார் அடித்ததாக கூறி இருக்கிறீர்கள். அந்த அளவிற்கு மலேசிய போலீசார் கீழ்த்தனமானவர்க கிடையாது. நாங்களும் சின்ன வயதில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இருக்கிறோம். ஆண் பிள்ளைகள் எங்களுக்கே சாப்பாடு, தண்ணீர் எல்லாம் வாங்கி கொடுத்து மரியாதை கொடுப்பவர்கள், பெண்பிள்ளை உங்களை அடித்தார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்: பணம் தான் முக்கியம்... பட வாய்ப்புகள் கிடைக்காததால் த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு..!

 

மேலும் நாடாவின் கணவர் தன்னுடைய நண்பர் தான் என்றும், அவர் சைனீஸ் இல்லை.  சரளமாக தமிழ் பேசுபவர் தான் இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் நாடியா மலேசிய மானத்தை வாங்கியதால் எனக்கு கோபமாக இருக்கிறது. நாடியாவின் அப்பா அம்மாவும்  மிகவும் தங்கமானவர்கள். போட்டியாளர்களிடம் லைக் வாங்க வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை நாடியா கூறியுள்ளதாக தெரிவியுள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!