Bayilvan Ranganathan Talk About Director and Actor Mysskin's Change : சர்ச்சைக்கு பெயர் போன மிஷ்கின் திருந்துவதற்கு என்ன காரணம் என்பது குறித்து நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
Bayilvan Ranganathan Talk About Director and Actor Mysskin's Change :சினிமாவில் இயக்குநரும், நடிகராகவும் அவதாரம் எடுத்தவர்களில் ஒருவர் தான் மிஷ்கின். எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை துணிச்சலோடு பேசுவார். அப்படிதான் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பாட்டில் ராதா பட இசை வெளியீட்டு விழாவில் மிஷ்கின் கலந்து கொண்டு பேசினார். இருவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் குடிகாரர்கள் என்றும், இளையராஜாவை ஒருமையில் பேசினார். இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பேட் கேர்ள் பட டீசர் வெளியீட்டு விழாவில் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார் மிஷ்கின். அதோடு தனது பிசாசு 2 பட கதை குறித்தும் பேசினார். அந்த கதைக்காக நிர்வாணக் காட்சீய்ல் நடிக்க வேண்டி இருக்கும் என்று ஆண்ட்ரியாவிடம் கூறினேன். அவர், மறுப்பு தெரிவிப்பார் என்று நினைத்தேன்.
கோலிவுட்டில் டிரெண்ட் செட்டராக மாறப்போகும் அஜித்தின் குட் பேட் அக்லி! காரணம் என்ன?
ஆனால், அவர் ஒப்புக் கொண்டார். நிர்வாணமாக எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதை ஷூட் பண்ணியது என்னுடைய பெண் உதவி இயக்குநர் தான். ஒரு ரூமிலிருந்து வெளியில் வந்து அவர் வரும் போது நிர்வாணமாக வர வேண்டும். அது தான் அந்த சீன். ஆண்ட்ரியா எனக்கு போன் போட்டு எங்க சார் இருக்குறிங்க என்று என்னிடம் கேட்டார்.
அட்டர் பிளாப் ஆன கேம் சேஞ்சர்; ஆனாலும் ரூ.100 கோடி லாபம் பார்த்த தில் ராஜு! அது எப்படி?
நானோ, உன்னுடைய நிர்வாண காட்சிகளை படத்தில் வைத்தால் படம் நன்றாக ஓடும். ஆனால், நான் பார்த்த விதத்தோடு தான் எல்லோருமே படம் பார்ப்பார்களா என்று கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. அதனால், இந்தக் காட்சிகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இந்த நிலையில் தான் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், பொதுவாக மிஷ்கின் தகாத வார்த்தைகளை பேசக் கூடியவர் தான். ஆனால் அன்றைய தினம் அவர் ஓவராக பேசிவிட்டார். யாரேனும் தடுத்து நிறுத்திருந்தால் அவர் அப்படி பேசியிருக்க மாட்டார். ஆனால் அன்று யாருமே தடுக்கவில்லை. அதே போன்று ஆண்ட்ரியாவின் நிர்வாக காட்சிகளை எடுக்காமல் விட்டுவிட்டார்.
இதற்கு காரணம் ஆண்ட்ரியாவின் நிர்வாண ஃபோட்டோஷூட் தான். அதன் பிறகு அவரிடத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். கடைசியாக மிஷ்கின் பிசாசு 2 படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
மஹா கும்பமேளாவில் புனித நீராடினாரா பிரகாஷ் ராஜ்? புயலை கிளப்பிய புகைப்படம்