முன்னணி இயக்குனர் படத்தில் ஹீரோவான அர்ஜுன் தாஸ்..! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு..!

Published : Feb 12, 2021, 04:01 PM IST
முன்னணி இயக்குனர் படத்தில் ஹீரோவான அர்ஜுன் தாஸ்..! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு..!

சுருக்கம்

தற்போது அர்ஜுன் தாஸ், தேசிய விருது இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.   

தமிழில் 'கைதி' படத்தில் வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் அர்ஜுன் தாஸ்.  ஏற்கனவே இவர் அட்லி தயாரிப்பில் வெளியான 'அந்தகாரம்' என்கிற படத்தில் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான விஜய்யின் 'மாஸ்டர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது அர்ஜுன் தாஸ், தேசிய விருது இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். 

'ஆல்பம்' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் 'காவியத்தலைவன்', 'அங்காடித்தெரு', என வரிசையாக முத்தான படங்களை இயக்கி ரசிகர்களின் கண்ணுக்கு விருந்து படைத்து வரும் வசந்த பாலன் இயக்கி முடித்துள்ள 'ஜெயில்' படம் விரைவில் ரிலீசாக உள்ளது. 

இந்த நிலையில் தற்போது தன்னுடைய பள்ளி நண்பர்களுடன் அர்பன் ஸ்டூடியோ என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி உள்ள வசந்தபாலன் முதல்முறையாக, இயக்கி - தயாரித்துள்ள படத்தில்  அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பதை அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் நாயகி, மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!