நடிகர் அக்ஷய் குமார்:
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அக்ஷய் குமார் 1991 ஆம் ஆண்டு ராக்கீ படம் மூலம் அறிமுகமாகி இன்று பல கோடிகளை சம்பளமாக பெரும் நடிகராக உள்ளார்.
விரைவில் இவர் ரஜினிகாந்துடன் நடித்துள்ள 2.0 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவரை பற்றிய ஒரு தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்சியாகியுள்ளது.
கடந்த காலம்:
இவர் திரைப்படங்களில் நடிக்க வாய்புகள் கிடைக்காத போது, தன்னுடைய செலவிற்காக சமையல் காரராக வேலை பார்த்தாராம். பின்பு தான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பாலிவுட் திரையுலகில் ஆரம்பத்தில், இவருக்கு மிகவும் குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டது. பின் இவரே தன்னை வளர்த்துக்கொள்ள மிகவும் கடுமையாக முயற்சிகள் செய்து நடனம், சண்டை பயிற்சிகள் ஆகியவற்றை கற்றும் சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்தும் இன்று முன்னணி நடிகராக மட்டும் இன்றி சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சம்பளம்:
தற்போது இவர் பாலிவுட் திரையுலகில் 45 கோடி சம்பளமாக பெரும் நடிகராக உள்ளார். 2.0 படத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோடி என சம்பளம் பெற்றுள்ளார். அப்படி பார்த்தல் ஹீரோவாக நடிக்கும் ரஜினிகாந்தை விட வில்லனாக நடித்த இவருக்கு தான் அதிகம் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.