ஐஸ்வர்யா ராய் பச்சன் தற்கொலை முயற்சியா?.. பரபரப்பு தகவல்கள்

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 10:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
ஐஸ்வர்யா ராய் பச்சன் தற்கொலை முயற்சியா?.. பரபரப்பு தகவல்கள்

சுருக்கம்

முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் பரவியுள்ளது.

 

அமிதாப்பச்சனின் மகன், அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யாராய் பச்சன். இவர் சமீபத்தில் ஏ தில் ஹே முஸ்கில் என்ற இந்திப் திரைப்படத்தில் ரன்பீர் கபீருடன் மிகவும் நெருக்கமாக நடித்தார். இந்த திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி சக்கை போடு போட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ரன்பீர்கபீருடன், ஐஸ்வர்யா ராய் பச்சன் நெருக்கமாக நடித்ததால், அவரின் குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன், அவரின் தந்தை அமிதாப் பச்சன் ஆகியோர் ஐஸ்வர்யா ராயை மிகவும் கடிந்த கொண்டார்கள். 

 

இதனால், மன விரக்தி அடைந்து ஐஸ்வர்யா ராய் பச்சன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றார். அவரைக் காப்பற்றி மருத்துவமனையில் சேர்த்தபின் தீவிர சிகிச்கைக்குபின் நலமுடன் இருப்பதாக சமூக வலைதங்களில் செய்தி வெளியானது. 

 

இது குறித்து, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட இந்தி திரைப்பட நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் மணிஷ் மல்கோத்ராவிடம்(50வயது) நிருபர்களிடம் கேட்டனர். அப்போது, அவர் கூறுகையில், “ என்னுடைய பிறந்தநாள் விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சனும், அபிஷேக் பச்சனும் கலந்து கொண்டுவிட்டு நண்பகலில் தான் புறப்பட்டுச்சென்றனர். அப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை ” என மறுத்தார். 

 

இதையடுத்து நடிகர் அபிஷேக், அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து கொண்டு கேட்டபோது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேசமயம், சரித்துக்கொண்டு, இதுமுற்றிலும் உண்மைக்கு மாறானது, எங்கள் குடும்பத்துக்குள் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்று தெரிவித்தனர். 

இதையடுத்து, அந்த செய்தி பரப்பியவர்கள் யார் என்று விசாரித்ததில் பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் அவுட்லுக் எனும் இணைதளம் இதுபோன்ற போலியான செய்திகளை பரப்பி, “பிக் பீ” குடும்பத்துக்கு களங்கம் ஏற்பட முயற்சித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. 

 

அதுமட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களுக்கு முன் கேத்ரீனா கைப், அமிதாப் பச்சன்  ஆகியோர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வந்தன. இதற்குமுன், பாடகி லதா மங்கேஸ்கர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திலிப் குமார், ஹனி சிங் ஆகியோரும் தற்கொலைக்கு முயன்றதாக பாகிஸ்தான் தளம் செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்