ஜெயலலிதா மறைவு ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது. இவரது மறைவிற்கு தனி விமானங்கள் மூலம் பிரதமர், மற்ற மாநில முதலமைச்சர்கள் வந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட நடிகர் வடிவேலுவையும் விட்டு வைக்க வில்லை முதலமைச்சர் மறைந்த சோகம்.
இதனால் நேற்று முதல்வருக்கு அஞ்சலி செலுத்த ஓடி வந்த வடிவேலுவை உள்ளே அனுமதிக்க வில்லையாம்.
இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘கடைசியாக அந்த தாய் முகத்தை பார்க்கலாம் என்று ஓடி வந்தேன், ஆனால், கூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை’ என்று சமாளித்து பேசினார்.
ஜெயலலிதாவை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொண்டதால், கிட்ட தட்ட 5 வருடங்கள் படம் நடிக்காமல் இருந்தார் வடிவேலு, இப்போது மீண்டும் கத்திச்சண்டை படம் மூலம் காமெடியனாக ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.