'காலா' பட நடிகர் நானா படேகர் மீது விஷால் பட நடிகை பாலியல் புகார்! ரஜினிக்கு வேண்டுகோள்!

By manimegalai aFirst Published Sep 26, 2018, 5:34 PM IST
Highlights

தமிழில் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நானா படேகர். எப்போதும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர், பெரும்பாலும் பாலிவுட் மற்றும் பெங்காலி திரைப்படங்களில் தான் அதிகம் நடிப்பார்.

தமிழில் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நானா படேகர். எப்போதும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர், பெரும்பாலும் பாலிவுட் மற்றும் பெங்காலி திரைப்படங்களில் தான் அதிகம் நடிப்பார்.

சமீபத்தில், இவர் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'காலா' திரைப்படத்தில் சைலன்ட் வில்லனாக நடித்து கெத்து காட்டி இருந்தார். ரஜினிக்கு சமமாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில், நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும். இது குறித்து தெரிந்தும், ஒருவர் கூட அதனை தட்டிக் கேட்கவில்லை என்று நடிகை தனுஸ்ரீ குற்றம்சாட்டியுள்ளார்.

இவர் நடிகர் விஷால் நடித்த, 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இந்த பாலியல் தொல்லை குறித்து பேட்டியளித்துள்ள இவர், கடந்த 2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே' என்ற படத்தின் படப்பிடிப்பில் ஒரு பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த போது...  நடிகர் நானா படேகர் தன்னிடம் அத்துமீறியதாகவும் ஆனால், இது குறித்து அறிந்தும் இயக்குநர், தயாரிப்பாளர் மட்டுமன்றி எவருமே நானா படேகரை தட்டிக்கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

மேலும், தற்போது முன்னணி நடிகராக இருக்கும், ரஜினி, அக்ஷய் குமார் போன்ற நடிகர்கள் இவருடன் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!