அதிர்ச்சி... பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

Published : Sep 01, 2023, 01:52 PM IST
அதிர்ச்சி... பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

சுருக்கம்

பிரபல இளம் நடிகை அபர்ணா நாயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பல மலையாள சீரியல்கள் மற்றும் தமிழில் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை அபர்ணா நாயர்... நேற்று  இரவு 7 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், விரைந்து வந்த போலீசார் இவரது உடலை கைப்பற்றி, இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

அபர்ணா நாயர் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். சீரியல் மட்டும் இன்றி,  2009 ஆம் ஆண்டு 'மேகதீர்த்தா' என்கிற மலையாள படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து 'கோடாடி சமக்ஷம் பாலன் வக்கீல்', 'கல்கி', 'அச்சாயன்ஸ்', 'முத்துகௌ' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அதே போல் தமிழில்... 'ரன் பேபி ரன்', 'எதுவும் நடக்கும்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவிலா கிட்ட கூட வர முடியாது! பணக்கார நடிகை ஜெயலலிதாவின்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அபர்ணா நாயர் மலையாளத்தில் 'ஆத்மசகி', 'சந்தனம்', 'தேவஸ்பர்ஷம்' மற்றும் 'மைதிலி இஸ் பேக்' போன்ற ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இவரின் இறப்புக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். 

இந்த சம்பவம் நடந்த போது வீட்டில் அவரது தாயும் சகோதரியும் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தூக்கிய தொங்கிய நிலையில் இருந்த அபர்ணாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், அபர்ணா முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. நடிகையின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள நிலையில், உறவினர்களிடம் நடிகை பற்றிய தகவல்களை போலீசார் வாக்கு மூலமாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவிலா கிட்ட கூட வர முடியாது! பணக்கார நடிகை ஜெயலலிதாவின்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அபர்ணா நாயர் சஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருக்கு த்ராயா மற்றும் கிருத்திகா என்ற குழந்தைகள் உள்ளனர். பல சீரியல்களில் மிகவும் பிசியாக நடித்து வந்த அபர்ணாவின் மறைவு மலையாள ரசிகர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!