சதுரங்க வேட்டை பாணியில் மோசடி! ரூ.5 கோடி முதலீடு பண்ணா ரூ.500 கோடி கிடைக்கும்னு சொல்லி பிரபல நடிகரிடம் கைவரிசை

Ganesh A   | Asianet News
Published : Mar 23, 2022, 07:16 AM IST
சதுரங்க வேட்டை பாணியில் மோசடி! ரூ.5 கோடி முதலீடு பண்ணா ரூ.500 கோடி கிடைக்கும்னு சொல்லி பிரபல நடிகரிடம் கைவரிசை

சுருக்கம்

Iridium Scam : இரிடியம் தொழிலில் ரூ.5 கோடி முதலீடு செய்தால் ரூ.500 கோடி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ராம் பிரபு, தன்னையும் முதலீடு செய்ய வைத்ததாக நடிகர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

வலிமை படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கிய முதல் படம் சதுரங்க வேட்டை. நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்திருந்த இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. பண ஆசையை தூண்டி ஏமாற்றும் மோசடி கும்பல் பற்றி இப்படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. குறிப்பாக அதில் இரிடியத்தில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ஏமாற்றும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கும்.

இந்நிலையில், தற்போது அதே பாணியில் சினிமா நடிகர் ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி ஒருவர் ரூ.1.80 கோடி மோசடி செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. பாரதிராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விக்னேஷ். இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், கிண்டியில் ஒரு உயர்ரக சலூன் கடை ஒன்றை நான் நடத்தி வருகிறேன். அந்த கடைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ராம் பிரபு என்பவர் அடிக்கடி வருவார். அவரிடம் உங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏன் என கேட்டதற்கு, இந்திய அரசின் அனுமதியோடு ஆஸ்திரேலியாவுக்கு ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியத்தை விற்றதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இரிடியம் தொழிலில் ரூ.5 கோடி முதலீடு செய்தால் ரூ.500 கோடி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறிய ராம் பிரபு, தன்னையும் முதலீடு செய்ய வைத்தார். நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த ரூ.1.80 கோடியை அவரிடம் கொடுத்தேன். பல நாட்கள் ஆகியும் கொடுத்த பணத்திற்கு இரட்டிப்பாக பணம் கொடுக்காததால் இதுகுறித்து ராம் பிரபுவிடம் கேட்டேன்.

அவர் கண்டெய்னரில் ரூ.500 கோடி வந்து கொண்டிருப்பதாகவும், பணம் வந்தவுடம் வட்டியுடன் கொடுப்பதாகவும் கையெழுத்திட்டு ராம் பிரபு நம்பிக்கை அளித்தார். எனினும் அவர்மீது சந்தேகம் எழுந்து, அவரைப்பற்றி விசாரித்தபோது தான் அவர் மோசடி நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை திருப்பி கேட்ட போது அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

தன்னைப் போன்று ராம் பிரபுவிடம் ஏராளமானோர் பணம் கொடுத்து ஏமாந்து உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத்தரக் கோரியும் நடிகர் விக்னேஷ் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்...   Suriya New movie : சூர்யா படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல இசையமைப்பாளர்! வாய்ப்பை தட்டித்தூக்கிய அனிருத்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!