நவரச நாயகன் கார்த்திக் சினிமாவில் நுழைத்து 40 வருடம்! தந்தையை நினைத்து பெருமையோடு மகன் வெளியிட்ட போஸ்டர்!

By manimegalai aFirst Published Jul 18, 2021, 5:51 PM IST
Highlights

1981 ஆம் ஆண்டு, 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது சினிமாவில் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து நடிகர் கார்த்தியின் மகன் கெளதம் கார்த்தி ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் என்கிற அடையாளத்தோடு, தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், பின்னர் தன்னுடைய நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் கார்த்திக். 1981 ஆம் ஆண்டு, 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது சினிமாவில் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகளை ஆகிறது. இதுகுறித்து நடிகர் கார்த்தியின் மகன் கெளதம் கார்த்திக் ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமாகி, தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்றவர். இதை தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு மட்டும் இவர் சுமார் 10 படங்களில் நடித்தார். வருடத்திற்கு சுமார் 5 - 6 படங்களுக்கு குறைவில்லாமல் நடித்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தார்.

ஒரே மாதிரியான படங்களை தேர்வு செய்யாமல், கிராமத்து இளைஞர், காலேஜ் பாய், என இவர் தனக்கு ஏற்ற போல் கதைகளை தேர்வு செய்து இவர் படங்கள் இவருக்கு எப்போதுமே பலமாகவே அமைந்தது. 'அக்னி நட்சத்திரம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சிறந்த நடிகருக்கான தமிழக விருதையும் பெற்றார். ஹீரோவாக நடிப்பதையும் தாண்டி இவரது காமெடி பேச்சு தற்போது வரை பலரது ஃபேவரட். 

2000 ஆம் ஆண்டுக்கு பின் வருடத்திற்கு ஒரு படத்தின் மட்டுமே நடிக்க துவங்கினார். 'அனேகன்' படத்தில் முதல் முறையாக வில்லனாகவும் நடித்து மிரட்டினார். கடைசியாக நடிகர் கார்த்தி சிவகுமார் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'தேவ்' படத்தில் நடித்திருந்தார் நடிகர் கார்த்திக். 20 வயதில் நடிக்க துவங்கிய இவர், தற்போது திரையுலகில் நுழைந்து தன்னுடைய 40 வருடம் ஆகிறது. 

நடிப்பை தாண்டி, தான் நடிக்கும் படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார். 2006 ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது... பாஜக கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது திடீர் என உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் தற்போது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்ற தன்னுடைய தந்தை திரையுலகில் காலடி எடுத்து வைத்து 40 வருடம் ஆகியுள்ளதை சிறப்பிக்கும் விதமாக, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் கெளதம். இதற்க்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Wow Dad! 40 years already?!
So happy to release this poster made by all his fans, friends, well-wishers and supporters. He always speaks of you as family and I'm so happy to see the feeling is mutual!
Thank you all!
Congrats Dad!
So proud! 😃😃😃 pic.twitter.com/lg2Q0DgEKN

— Gautham Karthik (@Gautham_Karthik)

click me!