Etharkkum Thunindhavan : தார தப்பட்ட கிழிய போகுது... சூர்யாவுக்காக ஒன்றிணைந்த 3 இசையமைப்பாளர்கள்

By Ganesh PerumalFirst Published Dec 6, 2021, 2:45 PM IST
Highlights

எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக வினய் நடிக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில், இப்படத்தில் மேலும் இரண்டு இசையமைப்பாளர்கள் பணியாற்றி உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷும், அனிருத்தும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இமான் இசையில் தலா ஒரு பாடல் பாடி உள்ளார்களாம். அந்த பாடல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!