சகல பாவங்களையும் போக்கும் நாக பஞ்சமி.. எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்?

Published : Aug 07, 2023, 10:13 AM IST
சகல பாவங்களையும் போக்கும் நாக பஞ்சமி.. எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்?

சுருக்கம்

நாக பஞ்சமியை அனுஷ்டிப்பதன் மூலம் சகல பாவங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெறலாம்.

இந்து மதத்தில் மிகவும் புனித மாதங்களில் ஒன்றாக ஆவணி மாதம். ஏனெனில் இந்த மாதம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதே போல் நாக பஞ்சமி இந்த மாதத்தின் முக்கியமான திருவிழாவாகும். நாக பஞ்சமி நாளில் சிவபெருமானையும் நாக தெய்வத்தையும் வழிபடுகின்றனர். ஆவணி மாதத்தில் நாக பஞ்சமி கொண்டாடும் பாரம்பரியம் உள்ளது. இந்நாளில் அனைத்து நாக தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு நாகத்திற்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது.

நாக பஞ்சமியை அனுஷ்டிப்பதன் மூலம் சகல பாவங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெறலாம். இதன் மூலம் ராகு, கேது, காலசர்ப்ப தோஷ தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. நாக பஞ்சமி திருநாளில் சில காரியங்களைச் செய்வது மங்களகரமானதாகக் கூறப்படுகிறது. எனவே ஒருவர் தனது ராசியின் படி நாக பஞ்சமி பூஜையின் போது சுப பலன்களைப் பெற என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் ராகு கிரகத்துடன் தொடர்புடைய தோஷங்களைப் போக்க ருத்ராஷ்டாத்யாயி பாடல்களை பாராயணம் செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

ரிஷபம்: ரிஷபம் நாக பஞ்சமி தினத்தன்று செம்புத் துண்டை ஓடும் நீரில் வீச வேண்டும் அல்லது மூழ்கடிக்க வேண்டும். அது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம்.

மிதுனம்: மிதுன ராசியினர் நாகபஞ்சமி தினத்தன்று தேவையற்றவர்களுக்கு பச்சைப்பயிறை தானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் ஜாதகத்தில் ராகு சாந்தம் அடைவார்.

கடகம்: கடக ராசிக்காரர்கள் நாக பஞ்சமி தினத்தன்று தேங்காயை ஓடும் நீரில் விட்டு சிவன் கோவிலுக்குச் சென்று பாம்பு வடிவ சிலையை வழிபட வேண்டும்.

 சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் நாக பஞ்சமி தினத்தன்று தேங்காய்களை தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இத்துடன் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.

கன்னி: நாக பஞ்சமி நாளில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கன்னி ராசிக்காரர்கள் உதவ வேண்டும். இது உங்கள் உடல்நலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் நாக பஞ்சமி தினத்தன்று வீட்டில் சிவ மந்திரத்தை படிக்க வேண்டும். இது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் நாகபஞ்சமி அன்று விநாயகப் பெருமானை வழிபட்டு மஞ்சள் நிறப் பூக்கள் மற்றும் லட்டுகளை அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலம் எல்லாம் மங்களகரமாக அமையும்.

தனுசு ராசி: தனு ராசிக்காரர்கள் நாகபஞ்சமி தினத்தன்று மாவு மற்றும் சர்க்கரை கலவையை சிவபெருமானுக்கு படைத்து பின்னர் அதை ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும்.

மகர ராசி: மகர ராசிக்காரர்கள் நாகர் பஞ்சமி நாளில் ஆதரவற்றோரு உணவு வழங்க வேண்டும்.  சிவலிங்கத்திற்கு கருப்பு எள் அர்ச்சனை செய்ய வேண்டும்.

கும்பம்: கும்ப ராசி நாகச்சாமி அன்று ஓடும் நீரில், நிலக்கரியை வீச வேண்டும். 'ஓம் நாகதேவதாய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் நாகர பஞ்சமி நாளில் ஓம் நம சிவாய மந்திரத்தை ஜபித்து ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும்.

சுகபோகங்களை அள்ளித்தரப்போகும் சுக்கிரன் - நாளை முதல் எல்லாமே அமோகம் தான்!

PREV
click me!

Recommended Stories

Mesham to Meenam Dec 10 Daily Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரை.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!
Thulam Rasi Palan Dec 10: துலாம் ராசி நேயர்களே, இன்று நடக்கும் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.!