Asianet News TamilAsianet News Tamil

நாற்றங்காலை எப்பவும் இப்படிதான் விதைக்கணும்... ரொம்ப முக்கியமானதுங்க..

The nursery is always sown like this ... it so important ..
The nursery is always sown like this ... it so important ..
Author
First Published Jun 27, 2018, 2:35 PM IST


நாற்றங்காலை விதைக்கும் முறை

** எப்போதும் நிலப்பரப்பிலிருந்து 10செமி உயரமுள்ள மேட்டுபாத்தி நாற்றாங்காலிலே விதைக்கவும். இதனால் நிர் சரியாக வடிவதால் நாற்றழுகல் வராமல் பாதுகாக்கப்படும்

** ஜுன் மாதத்தில், மூன்று வாரங்களுக்கு நாற்று பாத்தியை 45 காஜ் (0.45மி.மி மொத்தமுடைய பாலீதீன் ஷீட் கொண்டு மூடிவைக்க வேண்டும். இதனால் மணல் வெப்பமூட்டப்பட்டு, மணல் சார்ந்த நோய், பாக்டீரியா வாடல் நோய் மற்றும் நூற்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். 

** இருப்பினும் வெப்பமூட்டப்படும் போது போதுமான ஈரப்பதம் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் .

** மூன்று கிலோ பண்னை தொழுவுரத்துடன், பூஞ்சானின் எதிரியான ட்ரைகோடெர்மாவை 250 கிராம் கலந்து 7 நாட்கள் வைக்க வேண்டும். இதனை பின்னர் 3 சதுர மீட்டர் நாற்றாங்கால் படுக்கையில் கலக்கவும்.

** F1-321, போன்ற வீரிய இரக விதைகளை ஜூலை முதல் வாரத்தில் விதைக்கலாம். விதைப்பதற்கு முன் விதைகளை, ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் டைக்கோடெர்மா பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும். 

** களைகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நாற்று மற்றும் வேண்டாத நாற்று ஆகியவற்றை நீக்க வேண்டும்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios