technology in natural farming

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் இன்று விஞ்ஞானிகள் போல திகழ்கின்றனர், விவசாயத்தை எளிமைப்படுத்த பலவித கருவிகளை தாயாரிக்கின்றனர்.

கரும்புதோகைகளை மூடாக்கு போடும் வகையில் பொடி பொடியாக வெட்டி தரும் இயந்திரம் ஸ்ரீநாட். இதன் மூலம் மூடாக்கு போடும் வேலை எளிமையாகிறது.

செடியில் இருந்து கடலையை பிரிதெடுக்கம் கருவியை புதுச்சேரியை சேர்ந்த H.M.அந்தோணி என்பவர் கண்டுபிடித்திருக்கிறார்.

மதுரையை சேர்ந்த சுந்தர் ராஜ் என்பவர் சிறிய பரப்பளவு கொண்ட வயல்களில் கரும்புகளை வெட்ட கரும்பு வெட்டும் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்.

செல்போன் மூலம் பம்பு செட்டை இயக்கும் மென்பொருளை கோயம்புத்தூரைய் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அருண் கண்டுபிடித்திருக்கிறார்.

இது போன்ற தொழில்நுட்ப கருவிகளால் விவசாயிகள் மிகவும் பயன்பெறுகின்றனர்.

இப்படி புதுப்புது தொழில்நுட்ப கருவிகள் இயற்கை விவசாயத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.