ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 20 கிலோ பசுந்தீவனம், 15 கிலோ உலர்தீவனம், ஒரு கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும்.
Add Asianetnews Tamil as a Preferred Source

கறவை மாடாக இருந்தால், அது கொடுக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் அரைகிலோ வீதம் கூடுதலாக அடர்தீவனம் கொடுக்கவேண்டும்.
அடர்தீவனத்தில் நார்ச்சத்து உடைய தவிடு, உளுந்துப் பொட்டு, துவரைப் பொட்டு வகைகள் 45-50 சதவிகிதமும், மாவுச்சத்து உடைய அரிசி, கம்பு, சோளம் ஆகியவற்றின் மாவு 25-30 சதவிகிதமும், புரதச்சத்து உடைய பிண்ணாக்கு வகைகள் 15-20 சதவிகிதமும் இருக்கவேண்டும்.
அவற்றோடு தலா ஒரு சதவிகிதம் கல் உப்பு, தாது உப்புக்கலவை ஆகியவையும் இடம்பெற வேண்டும்.
