Asianet News TamilAsianet News Tamil

வீட்டருகே கோயில் இருப்பது நன்மையா? வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?

உங்கள் வீட்டிற்கு அருகில் ஏதேனும் கோயில்  இருக்கா? ஆம். எனில் உங்கள் வீட்டிற்கு எவ்வித தோஷமும் ஏற்படாமல் இருக்க, வாஸ்து சாஸ்திரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து காணலாம்...

benefits of having temple  at home
Author
First Published Apr 27, 2023, 10:41 AM IST

நீங்கள் வசிக்கக்கூடிய வீட்டின் அருகில் கோயில் இருந்தால், உங்களது வீட்டின் அமைப்பை எப்படி வைக்க வேண்டும். மேலும் நீங்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும், என்ன தவறை செய்யக்கூடாது என்று அறிந்திருக்க வேண்டும்.

வாஸ்து சாஸ்திரம்:

கோயிலின் கோபுர நிழல் நம் வீடு மீது விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே கோயில் அருகில் வீடு கட்ட நினைப்பர்கள் வாஸ்து நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு கட்டுவது நல்லது. இதில் உண்மை என்னவென்றால், கோயிலுக்கு அருகில் உங்கள் வீடு இருந்தால், உங்கள் வீட்டிற்கும், உங்களுக்கும் ஆன்மீக பலத்தை அதிகரிக்கும் மற்றும் எல்லா விதமான பிரச்சனைகளிலிருந்தும் உங்களை  காப்பாற்றும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக  உங்களது வீட்டின் பிரதான வாசலில் கடவுளின் உருவப்படத்தையோ அல்லது கடவுளின் படத்தை டைல்ஸில் ஒட்டி வைக்க வேண்டும். அவ்வாறு  செய்தால் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்று வாஸ்து நிபுணர்களால் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வெட்டி வேரை நம் வீட்டில் வைத்தால்... எல்லா செல்வங்களும் நம்மை தேடி வரும்..வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்!

நன்மைகள்:

  • உங்கள் வீட்டின் அருகே சிவன் கோயில் ஏதேனும் ஒரு திசையில் இருந்தால், உங்கள் வீட்டின் முன் விநாயகர் சிலையை நிறுவ வேண்டும். அவ்வாறு செய்தால் உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கும். ஆனால் வீட்டின் முன்புறம் சிவன் கோயில் இருந்தால், வீட்டின் பிரதான வாசலில் செம்புப் பாம்பை புதைக்க வேண்டும். இப்படி செய்தால் எவ்விதமான வாஸ்து தோஷமும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
  • குறிப்பாக அம்மன் கோயில் உங்கள் வீட்டை ஒட்டி  இருந்தால், அம்மனின் நல்லருள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் உங்கள் வீட்டின் பிரதான வாசல் அருகே, அம்மனின் ஆயுத சின்னத்தை படமாகவும் அல்லது சிறிய சிலையாகவும் வைக்கலாம். அம்மன் சிலை ஆயுதம் இல்லாமல் இருந்தால், அந்த அம்மனின் வாகனம் சின்னத்தை வாசலில் வைக்கலாம்.
  • உங்கள் வீட்டருகே கிருஷ்ணர் கோயில் இருந்தால், உங்கள் வீட்டு பிரதான வாசல் சுவரில் சுதர்சன சக்ர வடிவத்தில் ஒரு படத்தை நிறுவினால் நன்மை உண்டாகும் என்று வாஸ்து நிபுணர்களால் கூறப்படுகிறது.
  • உங்கள் வீட்டருகே விஷ்ணுவின் அவதார கோயில் இருந்தால், உங்கள் வீட்டின் பிரதான வாசலில் பஞ்சமுகி அனுமன் படத்தை வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பஞ்சமுகி அனுமன் உங்கள் வீட்டில் இருந்து எல்லா வித வாஸ்து தோஷங்களையும் நீங்கி, உஉங்களுக்கு நிம்மதி தருவார்.
  • உங்கள் வீட்டுக்கு எதிரில் அல்லது பக்கத்தில் பகவதி லட்சுமி கோயில் இருப்பின், உங்கள் வீட்டு வாசலில் தாமரை படம் அல்லது விஷ்ணுவின் படத்தை வைத்து, தினமும் அவருக்கு தாமரை மாலையை அணிவித்து வந்தால் வீட்டில் எந்த தோஷமும் அண்டாது.
  • உங்கள் வீட்டருகே பெருமாள் கோயில் இருந்தால், உங்கள் வீட்டின் ஈசான்ய மூலையான வடகிழக்கு பகுதியில் வெள்ளி அல்லது செம்பு பாத்திரம் வைத்து அதில் வலம்புரி சங்கு வைத்து தினமும் நீர் நிரப்பி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும். மகா விஷ்ணுவின் அவதாரமான ராமர் கோயில் இருந்தால், உங்கள் வீட்டின் பிரதான வாசலில் அம்புகள் இல்லாத வில் போன்ற தெய்வீக படத்தை சுவரில் வைத்தால் தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது.
  • பைரவர் கோயில் உங்கள் வீட்டின் எதிரில் இருந்தால், அதன் பிரதான வாயிலில் காக்கைகளுக்கு தினமும் உணவு அளிக்க வேண்டும். எனவே உங்களின் வீட்டருகே ஏதேனும் கோயில் இருந்தால் பயப்படத் தேவையில்லை.
Follow Us:
Download App:
  • android
  • ios