Asianet News TamilAsianet News Tamil

Earthquake : தொடர்ந்து 2 முறை பெங்களூரில் நிலநடுக்கம்.. பதற்றத்தில் பொதுமக்கள்..!

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Villagers in Chikballapur district of Karnataka have been hit by two earthquakes in a row around bangalore
Author
Karnataka, First Published Dec 22, 2021, 11:35 AM IST

கர்நாடகா மாநிலம்  பெங்களூரிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது சிக்பல்லாப்பூர் மாவட்டம். இன்று காலை 7.14 மணியளவில் திடீரென சிக்கபல்லாபுரா நகரில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1-ஆக பதிவாக்கியுள்ளது.

Villagers in Chikballapur district of Karnataka have been hit by two earthquakes in a row around bangalore

கடந்த மாதம்  12  ஆம் தேதி  இதே  சிக்பல்லாப்பூரா  மாவட்டத்தில்  மாலை மற்றும் இரவில் என  மொத்தமாக 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள  சிந்தாமணி, மிட்டஹள்ளி, அப்சனஹள்ளி,கொடகன்லு ஆகிய கிராமங்களில்   நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஒரு மாதத்திற்குள்ளாக மீண்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இதே ஆண்டில் இரண்டாவது முறையாக சிக்கபல்லாபூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

Villagers in Chikballapur district of Karnataka have been hit by two earthquakes in a row around bangalore

அடுத்தடுத்து  இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என  கூறப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம்  குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நில அதிர்வு பெங்களூர் மக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios