Asianet News TamilAsianet News Tamil

அடிப்பாவி.. 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர தாய்.. அதிர வைக்கும் காரணம்.!

நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட 5 பெண் குழந்தைகளும் அடங்கும். இதனையடுத்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

shocking news... woman threw 6 children into the well in Maharashtra
Author
Maharashtra, First Published May 31, 2022, 11:13 AM IST

கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 குழந்தைகளை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம், காரவலி கிராமத்தில் உள்ள 30 வயது பெண்.  இவர்களுக்கு 18 மாததே ஆன குழந்தை உள்ளிட்ட 10 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இந்த தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று அதேபோல் மீண்டும் சண்டை வெடித்துள்ளது. இதில் உச்சக்கட்ட ஆத்திரமும் அடைந்த அந்த பெண், அங்குள்ள கிணற்றுக்குள் தன்னுடைய 6 குழந்தைகளையும் தரதரவென இழுத்து சென்று, அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். அந்த குழந்தைகளோ அலறியபடி தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி துடிதுடித்து இறந்தன. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

shocking news... woman threw 6 children into the well in Maharashtra

உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் விழுந்த  குழந்தைகளை சடலமாக மீட்டனர். நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட 5 பெண் குழந்தைகளும் அடங்கும். இதனையடுத்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

shocking news... woman threw 6 children into the well in Maharashtra

அப்போது அந்த பெண் கூறுகையில்;- குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும், இதனால் வெறுப்படைந்த  அவர் பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios