அடிப்பாவி.. 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர தாய்.. அதிர வைக்கும் காரணம்.!
நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட 5 பெண் குழந்தைகளும் அடங்கும். இதனையடுத்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 குழந்தைகளை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம், காரவலி கிராமத்தில் உள்ள 30 வயது பெண். இவர்களுக்கு 18 மாததே ஆன குழந்தை உள்ளிட்ட 10 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இந்த தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று அதேபோல் மீண்டும் சண்டை வெடித்துள்ளது. இதில் உச்சக்கட்ட ஆத்திரமும் அடைந்த அந்த பெண், அங்குள்ள கிணற்றுக்குள் தன்னுடைய 6 குழந்தைகளையும் தரதரவென இழுத்து சென்று, அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். அந்த குழந்தைகளோ அலறியபடி தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி துடிதுடித்து இறந்தன. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் விழுந்த குழந்தைகளை சடலமாக மீட்டனர். நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட 5 பெண் குழந்தைகளும் அடங்கும். இதனையடுத்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண் கூறுகையில்;- குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும், இதனால் வெறுப்படைந்த அவர் பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.