லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி.. ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.
கால்நடைத் தீவின ஊழல் தொடர்பான மற்றொரு முக்கியமான வழக்கில் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 75 பேர் குற்றவாளிகள் என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் தண்டிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.