சர்வதேச விருதினை தட்டி சென்ற கபாப் வியாபாரி புகைப்படம்.. பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர் விருது..
காஷ்மீர் கபாப் வியாபாரியின் புகைப்படம் ஒன்று சர்வதேச புகைப்பட விருதினை வென்றுள்ளது. காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் தெருவோர வியாபாரி ஒருவரின் படத்திற்காக, இந்திய புகைப்படக் கலைஞர் தேப்தத்தா சக்ரவர்த்தி 2022 ஆம் ஆண்டின் பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர் விருதை வென்றார்.
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உணவு புகைப்படக்கார்களுக்கு பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்கான போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக உலகம் முழுவதும் 60 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் குவிந்துள்ளன.
இவற்றில் இந்தியாவைச் சேர்ந்த தேபதத்தா சக்ரபோர்தி, காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள கய்யாம் சவுக் பகுதியில் ஒரு பிரபல கபாப் வியாபாரியின் புகைப்படத்தை எடுத்து போட்டிக்காக அனுப்பியிருந்தார்.அவரது அந்தப் புகைப்படம் 2022 ஆம் ஆண்டுக்கான பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர் ஆஃப் தி இயர் விருதை வென்றுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சக்ரபோர்தி தனது புகைப்பட்டத்தில் கெபாபியானா என்று பெயர் வைத்துள்ளார்.அந்தப் புகைப்படத்தில் க்ரில் அடுப்பில் இருந்து எழும் புகைக்கு மத்தியில் தகிக்கும் கபாப் உணவும், அதைத் தயாரிப்பவரின் உணர்வும் அப்படியே புகைப்படத்தில் படம்பிடித்துள்ளார்.
கெபாபியானா என்ற தலைப்பில் உள்ள படத்தில், விற்பனையாளர் புகை நிறைந்த உணவுக் கூட்டில் வேலை செய்வதைக் காணலாம். இந்த புகைப்படம் ஸ்ரீநகரின் கயாம் சௌக்கில் படமாக்கப்பட்டது. இந்த தெரு மாலைவேளையில் உணவு பிரியர்களின் சொர்க்கமாக பார்க்கப்படுகிறது. மேலும் கிரில்ஸில் இருந்து வாஸ்வான் கபாப்களின் நறுமணமும் புகையும் இந்த தெருவை உணவுப் பிரியர்களின் சொர்க்கமாக மாற்றுகிறது.
பிங்க் லேடி உணவு புகைப்படக் கலைஞரின் நிறுவனரும் இயக்குநருமான கரோலின் கென்யான், வெற்றி பெற்ற புகைப்படம் "உணவை தயார் செய்பவரின் உணர்வை அழகாக வெளிப்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் அவரது மனைவி "ஸ்பேர்க்ஸில் இருந்து தீப்பொறிகள் பறக்கின்றன, அதன் வறுத்தலை நாம் கிட்டத்தட்ட வாசனை செய்யலாம், சூடான, சுவையான நறுமணத்தை நாங்கள் கற்பனை செய்கிறோம். இந்த படம், மென்மையான ஆனால் சக்தி வாய்ந்தது, நம் ஆன்மாவை வளர்க்கிறது, ”என்று கூறினார்.