Asianet News TamilAsianet News Tamil

பெரிய விபத்து தவிர்ப்பு; பத்திரமாக தரையிறக்கப்பட்ட அப்பாச்சி AH-64 ஹெலிகாப்டர்!!

விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர் இன்று மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

IAFs Apache Helicopter Makes Precautionary Landing In Madhya Pradesh
Author
First Published May 29, 2023, 11:43 AM IST

ஹெலிகாப்டரில் ழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்த விமானி, முன்னெச்சரிக்கையாக தரையிறக்க முடிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானியின் கவனத்துடன் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

"இந்திய விமானப்படையின் Apache AH-64 ஹெலிகாப்டர், வழக்கமான பயிற்சியின் போது, பிந்த் அருகே முன்னெச்சரிக்கையாக தரையிறங்கியது. அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். சரிபார்க்கும் குழு அந்த இடத்தை அடைந்துள்ளது" என்று இந்திய விமானப்படை தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

AH-64 Apache உலகின் அதிநவீன பல்வேறு தளங்களில் களமாடும் போர் ஹெலிகாப்டர் ஆகும். இந்திய விமானப்படையிடம் 22 AH-64E Apache ஹெலிகாப்டர்கள் உள்ளன, மேலும் 2020 ஆம் ஆண்டில், இந்திய ராணுவத்திற்கு மேலும் ஆறு Apache ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் போயிங் கையெழுத்திட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios