MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வீட்டு நிலை வாசல்/பூஜை அறையில் இத செஞ்சு பாருங்க! வாஸ்து,தொழில், பணப் பிரச்சனைகள் எல்லாம் க்ளீயர் ஆயிடும்!

வீட்டு நிலை வாசல்/பூஜை அறையில் இத செஞ்சு பாருங்க! வாஸ்து,தொழில், பணப் பிரச்சனைகள் எல்லாம் க்ளீயர் ஆயிடும்!

மகாலட்சுமியின் அருள் பெற நிலைவாசலில் / பூஜை அறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Dinesh TG
Published : Apr 10 2023, 11:05 AM IST| Updated : Apr 11 2023, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

என்ன தான் நேரம் பார்க்காமல் கடினமாக உழைத்தாலும், சில நேரங்களில் நமக்கு போதியமான அளவில் வருமானம் கிடைக்காமல் அல்லல் படுகிறோம். பின் அதனை சமாளிக்க
கடன் வாங்கி சமாளிக்கிறோம்.

ஒரு சிலருக்கு என்ன தான் வியாபார யுத்திகளை கையாண்டாலும் வியாபாரம் சரியாக நடக்கமால் இருக்கும். இதற்கு வாஸ்து படி சில பிரச்சனைகள் இருக்கலாம்.

இதனை சரிசெய்ய வீட்டு பூஜை ரூமில் சுப சின்னங்களை வரைந்தால் அது நேர்மறை ஆற்றலை உண்டாக்கி மிகச் சிறந்த பலன்களை தரும் என்று நம்பப்படுகிறது. சுப சின்னங்களை வரைவதால் வாழ்க்கையின் பல்வேறு விதமான பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும் என்று சொல்லபடுகிறது.

சுபச் சின்னங்களை வழிபட்டு வந்தால் பண மழையும், சந்தோஷமும் கிடைக்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் அருள் பெற நிலைவாசலில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

வீட்டில் புனிதமான மற்றும் தூய்மையான இடமாக பூஜை அறை கருதப்படுகிறது. பூஜை அறையில் இருக்கும் தெய்வங்கள் அங்கு வசிப்பதாக ஐதீகம். ஆகையால் நம் வீட்டின் பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைக்க நாம் முயற்சிப்போம்.

24

வடகிழக்கு திசை, தெய்வங்களுக்கு ஏற்ற திசையாக இருக்கிறது. இத்திசையில் இருந்து நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வாஸ்து படி ஆன்மீக சின்னங்களான ஓம், ஸ்வஸ்திக், ஸ்ரீ போன்றவற்றை பூஜை அறையில்/ வீட்டின் நிலை வாசலில் படம் வைத்து/ வரைந்து வழிபாட்டால் நமது நிதி நிலையில் நிச்சயமாக ஏற்றமிருக்கும். அதோடு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

ஸ்வஸ்திக் சின்னம்:

வீட்டின் பூஜை அறை /நிலை வாசலில் மஞ்சள் வைத்து ஸ்வஸ்திக் சின்னம் வரைவதால் சுப பலன்களை அது தரும்.தவிர இப்படி செய்வதன் மூலம் வீட்டின் வாஸ்து குறைகள் இருக்குமாயின் அதனை அகற்றி, நேர்மறை சக்தியை கொடுக்கும்.

ஸ்வஸ்திக் குறியீட்டை வரையும் போது நீளம் அகலம் இரண்டும் 1 அடி அளவில் உள்ளவாறு வரைய வேண்டும். இல்லையேல் ஸ்வஸ்திக் படத்தைக் கூட வைத்து பூஜிக்கலாம்.

இந்த ஸ்வஸ்திக் சின்னம் தீய விளைவுகளை தடுத்து நிறுத்துவதோடு லட்சுமி தேவியின் பரிபூரண ஆசீர்வாதத்தையும் தருகிறது. வீட்டில் மட்டும் இலலாமல் இதனை தொழில் செய்யும் இடங்களிலும் செய்வதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைந்து லாபம் கிடைக்க பெறுவீர்கள் .

34

​ஓம் குறியீட்டின் நன்மைகள்:

வீட்டின் பூஜை அறையினுள்ளே/ பூஜை அறைக்கு மேற்புற சுவற்றில் குங்குமம்/சந்தனத்தைக் கொண்டு ஓம் சின்னத்தை வரையுங்கள் அல்லது படத்தை ஒட்டி வைங்கள்.
பூஜையின் போது ஓம் என்ற பிரணவ மந்திரத்தை பார்ப்பதாலும் , உச்சரிப்பதாலும் நினைவாற்றல் மற்றும் தெளிவு பிறக்கும் என்பது ஐதீகம். தவிர மன தைரியம் அதிகரிக்கும்.

அதோடு குடும்பத்தில் நிலவும் தேவையற்ற பயம் ,பதற்றம் நீங்கி, மகிழ்ச்சி கிடைக்கும்.இதனை குங்குமம் அல்லது சந்தனத்தால் வரைவதால் குடும்பத்தில் இருக்கும் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து வாழ்வில் முன்னேற்றமான சூழல் உருவாகும்.

44

​ஸ்ரீ குறியீட்டின் நன்மைகள்:

அன்னை லட்சுமியின் சின்னமான ஸ்ரீ குறியீட்டை பூஜை அறையில் குங்குமம் வைத்து வரைவதால் உங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செல்வ செழிப்போடும் மாறுகிறது. அதோடு லட்சுமி தேவியின் அருளும் ஆசியும் வீடு முழுவதும் நிலைத்து நிற்கும்.

வாஸ்து படி, ஸ்ரீ சின்னத்தை வரைந்தால் :

வீட்டில் பணம் மற்றும் உணவு தானியங்களுக்கு ஒரு போதும் குறைவே இருக்காது. அதோடு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஸ்ரீ சின்னம் இருந்தால் அன்னை லக்ஷ்மி எப்போதும் அங்கு வசிப்பாள் என்பது ஐதீகம். தொழில் செய்யும் இடத்தில் வருவதால் தொழிலில் மேன்மை உண்டாகும். 

ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இதனை செய்து வாழ்வில் வளம் பெற்று முன்னேறுங்கள். 

க்ரிஸ்பி அண்ட் க்ரன்ச்சியாக இருக்கும் ப்ரக்கோலி மசால் வடை !நீங்க ட்ரை பண்ணிருக்கீங்களா?

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
Recommended image2
Spiritual: நொடியில் ஓடி மறையும் கடன் தொல்லை.! கோடீஸ்வர யோகத்தை தரும் பரிகாரங்கள்.!
Recommended image3
Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved