வரி தொடர்பான குற்றங்களை ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் மகன் ஹண்டர் பிடன்.. சிறை தண்டனை கிடைக்குமா?

Published : Jun 20, 2023, 09:34 PM ISTUpdated : Jun 20, 2023, 09:37 PM IST
வரி தொடர்பான குற்றங்களை ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் மகன் ஹண்டர் பிடன்.. சிறை தண்டனை கிடைக்குமா?

சுருக்கம்

அமெரிக்க அதிபரின் மகன் ஹண்டர் பிடன் வரிக் கணக்கு குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் மகன் ஹண்டர், மத்திய வருமான வரி செலுத்தத் தவறியதாக வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த தகவலை அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஹண்டர் பிடன் மீது குடியரசுக் கட்சியினர் வணிகப் பரிவர்த்தனைகள், போதைப்பொருள் பயன்படுத்துவது தொடர்பாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில் ஹண்டர் பிடன் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருத்தல் தொடர்பான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

53 வயதான ஹண்டர் பிடனுக்கும் அவரது சொந்த மாநிலமான டெலாவேரில் உள்ள அமெரிக்க அட்டர்னி அலுவலகத்திற்கும் இடையேயான மனு ஒப்பந்தம் இன்னும் ஒரு கூட்டாட்சி நீதிபதியால் அங்கீகரிக்கப்பட வேண்டும். எனவே ஹண்டர் பிடன் எந்த சிறைத் தண்டனையையும் எதிர்கொள்ள வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்க வழக்கறிஞர் டேவிட் வெயிஸ் இதுகுறித்து பேசிய போது “  ஹண்டர் பிடன் "கூட்டாட்சி வருமான வரி செலுத்துவதில் வேண்டுமென்றே தவறிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு" குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறினார்.

ஐ.நா. சபையில் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதைத் தடுத்த சீனா!

முன்னதாக ஹண்டர் பிடன் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் $1.5 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தில் தனது வரிக் கணக்கை சரியான நேரத்தில் தாக்கல் செய்யத் தவறிவிட்டார். இரண்டு வருடங்களிலும் அவர் அந்த வருமானத்தின் மீது $100,000க்கு மேல் வரி செலுத்த வேண்டியிருந்தது. ஒவ்வொரு எண்ணிக்கையும் 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் $100,000 வரை அபராதம் அல்லது சட்டத்தை மீறுவதன் மூலம் அவர் பெற்றதை விட இரட்டிப்பாகும்.

ஹண்டர் பிடன் "சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருப்பது" என்ற குற்றத்தையும் எதிர்கொள்கிறார் என்று வெயிஸ் கூறினார். ஹண்டர் பிடன் கடந்த காலங்களில் போதைப்பொருளுடன் போராடியதாக ஒப்புக்கொண்டார். துப்பாக்கிக் குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்குத் தொடரப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.

ஹண்டர் பிடனின் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் கிளார்க், அமெரிக்க ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், "வரி செலுத்துவதில் தவறிழைக்கப்பட்ட இரண்டு நிகழ்வுகளுக்கு ஹண்டர் பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையில் மோசமான சூழலின் போது போது தான் செய்த இந்த தவறுகளுக்கு பொறுப்பேற்பது முக்கியம் என்று ஹண்டர் நம்புகிறார்" என்று கிளார்க் கூறினார். 

அரசாங்க ரகசியங்களை தவறாகக் கையாண்ட குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள குடியரசுக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,  ஹண்டர் பிடனுக்கு "வெறும் போக்குவரத்து டிக்கெட்" என்று சாடினார். மேலும் "எங்கள் அமைப்பு உடைந்துவிட்டது!" டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் முயற்சிக்கு பிறகு, தினை சார்ந்த உணவுகளை மெனுவில் சேர்த்த நியூயார்க் உணவகம்..

PREV
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!