இந்த போலி SMS வந்தா நம்பாதீங்க.. உங்கள் தகவல்கள் திருடப்படலாம்.. சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை..

Published : Jul 17, 2023, 02:36 PM IST
இந்த போலி SMS வந்தா நம்பாதீங்க.. உங்கள் தகவல்கள் திருடப்படலாம்.. சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை..

சுருக்கம்

ஆண்ட்ராய்டு பயனர்கள் 'anti-scam' செயலியை பதிவிறக்கம் செய்யும்படி போலி எஸ்எம்எஸ் அனுப்பப்படுவதாக சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது

சிங்கப்பூர் காவல்துறையின் "ஊழல் எதிர்ப்பு மையம் (ASC)" என்று போலி எஸ்எம்எஸ் மூலம் ஒரு எச்சரிக்கையை நேற்று வெளியிட்டது. அந்த அறிவிப்பில் " பொதுமக்கள், ASC பெயரில் தங்கள் சாதனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய "“anti-scam" செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவுமாறு கோருகின்றனர். "Android Package Kit (APK) கோப்புக்கு வழிவகுக்கும் URL இணைப்புக்கு போலியான எஸ்எம்எஸ்  இது ஆண்ட்ராய்டின் இயங்குதளத்திற்காக உருவாக்கப்பட்டது.

போலி இணையதளத்தில் "ஆண்டி-ஸ்கேம்" பயன்பாட்டைப் பதிவிறக்க ஐகான் உள்ளது மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், ஆண்ட்ராய்டு பயனர்கள் சேவையை இயக்க அணுகல் சேவைகளை அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விரிவான பாதுகாப்பை வழங்குவதன் மூலம் மோசடிகளை அடையாளம் காணவும் தடுக்கவும் உதவுவதாக போலி ஆப் கூறினாலும், அதைப் பதிவிறக்குவதன் மூலம் சைபர் குற்றவாளிகள், உங்கள் செல்போனை அணுகி தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட பல தகவல்களை திருடக்கூடும். எனவே பொதுமக்கள் தங்கள் சாதனங்களில் சந்தேகத்திற்கிடமான APK கோப்புகளைப் பதிவிறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த செயலி தீங்கிழைக்கும் மால்வேரை கொண்டிருக்கும், மோசடி செய்பவர்கள் சாதனத்தை ரிமோட் மூலம் அணுகவும் கட்டுப்படுத்தவும் மற்றும் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களைத் திருடவும் அனுமதிக்கும்" என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பொதுமக்கள் தங்கள் சாதனங்களில் வைரஸ் எதிர்ப்பு அல்லது மால்வேர் எதிர்ப்பு பயன்பாடுகளைச் சேர்ப்பது உட்பட பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தங்கள் ஃபோன் Settings-ல் "unknown app” “unknown sources என்ற ஆப்ஷனை Disable செய்ய வேண்டும். மேலும் பயனர் முறையான பயன்பாடாக இருப்பதை உறுதிசெய்ய, பயன்பாட்டு பட்டியலில் உள்ள டெவலப்பர் தகவல் மற்றும் பதிவிறக்கங்களின் எண்ணிக்கை மற்றும் பயனர் மதிப்புரைகளை சரிபார்க்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஏதேனும் மோசடியான பரிவர்த்தனைகள் நடந்தால் உடனடியாக வங்கிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் கோபம்.. இந்திய பெண்மணியை 26 முறை கத்தியால் குத்தி கொன்ற பணிப்பெண் - சிங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!
இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!