
அனந்த்நாக்கில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி அடில் தோகரின் வீட்டை பாதுகாப்புப் படையினர் இடித்துள்ளனர்.தெற்கு காஷ்மீரின் டிராலில் உள்ள மற்றொரு பயங்கரவாதி ஆசிப் ஷேக்கின் வீட்டில் சோதனை நடத்தியபோது கம்பிகள் கொண்ட சந்தேகத்திற்கிடமான பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. ராணுவத்தின் பொறியியல் குழு வெடிக்கச் செய்த பின்னர், ஒரு குண்டுவெடிப்பு ஏற்பட்டு வீடு இடிந்து விழுந்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஆசிப் மற்றொரு பயங்கரவாதியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.