சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?

சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?

Ansgar R |  
Published : Jun 06, 2024, 11:00 PM IST

Savukku Shankar : திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் சொந்த ஜாமினில் விடுவிடுவிக்கப்பட்டார். 

சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை பற்றி தவறாக பேசி நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் தடுபட சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கோவை சிறையில்  உயிருக்கு பாதுகாப்பு இல்லை என அவர் கூறியதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

இந்த நிலையில், திருச்சயில் அவர் மீது முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே திருச்சிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 4ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் சிறப்பு உதவி ஆய்வாளர் லதா திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கின் விசாரணைக்காக இன்று சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டு, தொடர்ந்து கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். சவுக்கு சங்கர் இந்த வழக்கில் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்ற  காவலுக்கும் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்ராவிடவில்லை. அதனைத்தொடர்ந்து மீண்டும் புழல் சிறைக்கு சவுக்கு சங்கர் கொண்டு செல்லப்பட்டார்.

08:50மேகதாதுவை தடுக்க 1 லட்சம் கோடி கடன் வாங்குங்க!" - முந்தைய திமுக அரசின் அலட்சியத்தை சாடிய அன்புமணி
04:00மக்கள் நலனை மறைக்கும் போலி அரசியல்!" - திமுகவை துவம்சம் செய்த அமைச்சர் செங்கோட்டையன் !
08:36தவெக அரசுக்கு அரணாக நிற்பேன்!" - மேகதாது அணை மற்றும் அரசியல் எதிரிகளை நோக்கி பாய்ந்த வைகோ !
03:12MGR, ஜெயலலிதா, அல்ல நீங்கள்! ஆணவத்தால் அதிமுக வாக்குகள் தவெகவுக்கு.. EPS விளாசும் முன்னாள் நிர்வாகி
06:26"இப்ப எதிரி யாருன்னு தெரிஞ்சிருச்சு.. சும்மா விட்றமாட்டோம்!" - உதயநிதி ஸ்டாலின்!
07:41ஆளுநரை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்! கொதித்த காங்கிரஸ் தலைவர்
02:55ஆளுநரின் கருத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம்!
07:26ராணிப்பேட்டை சம்பவம்.. கொதித்த நயினார் நாகேந்திரன்!
03:13கைதுக்கு அஞ்ச மாட்டோம் ! சிறையிலிருந்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ! கொண்டாடிய திமுக!
08:37கடந்தகால திமுக ஆட்சிக்கும்....தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை ! நயினார் நாகேந்திரன் பேட்டி
Read more