சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?

சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?

Ansgar R |  
Published : Jun 06, 2024, 11:00 PM IST

Savukku Shankar : திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் சொந்த ஜாமினில் விடுவிடுவிக்கப்பட்டார். 

சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை பற்றி தவறாக பேசி நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் தடுபட சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கோவை சிறையில்  உயிருக்கு பாதுகாப்பு இல்லை என அவர் கூறியதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

இந்த நிலையில், திருச்சயில் அவர் மீது முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே திருச்சிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 4ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் சிறப்பு உதவி ஆய்வாளர் லதா திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கின் விசாரணைக்காக இன்று சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டு, தொடர்ந்து கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். சவுக்கு சங்கர் இந்த வழக்கில் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்ற  காவலுக்கும் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்ராவிடவில்லை. அதனைத்தொடர்ந்து மீண்டும் புழல் சிறைக்கு சவுக்கு சங்கர் கொண்டு செல்லப்பட்டார்.

06:11சென்னையில் பாமகவின் 24-வது நிழல் வரவு செலவுத் திட்டம் வெளியீடு ! அன்புமணி ராமதாஸ் பேட்டி
04:58கோவை மெட்ரோ திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்!
06:06பருவமழை முன்னேற்பாடு: கூவம் ஆற்றில் நடக்கும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் என். ஆனந்த்!
07:27மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
03:10களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல!
08:21தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர முடியாது ! - மேகதாட்டு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி
07:04தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி
03:42எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!
07:41பேசுவதற்கு சுதந்திரம் இல்லை.....சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் போலியானது ! சனம் ஷெட்டி ஆவேசம்
04:16NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?
Read more