சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?

சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?

Ansgar R |  
Published : Jun 06, 2024, 11:00 PM IST

Savukku Shankar : திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் சொந்த ஜாமினில் விடுவிடுவிக்கப்பட்டார். 

சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை பற்றி தவறாக பேசி நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் தடுபட சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கோவை சிறையில்  உயிருக்கு பாதுகாப்பு இல்லை என அவர் கூறியதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

இந்த நிலையில், திருச்சயில் அவர் மீது முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே திருச்சிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 4ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் சிறப்பு உதவி ஆய்வாளர் லதா திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கின் விசாரணைக்காக இன்று சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டு, தொடர்ந்து கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். சவுக்கு சங்கர் இந்த வழக்கில் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்ற  காவலுக்கும் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்ராவிடவில்லை. அதனைத்தொடர்ந்து மீண்டும் புழல் சிறைக்கு சவுக்கு சங்கர் கொண்டு செல்லப்பட்டார்.

01:35பொதுமக்கள் சிரமம் தவிர்க்க அதிரடி நடவடிக்கை எடுத்த வி.எஸ்.பாபு..!
03:10TN Govt Scheme: 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!
03:58TVK-வுக்கு திருமா கொடுத்த அட்வைஸ்! "விஜய் இதில் உஷாரா இருக்கணும்..
03:38பெரம்பலூரில் திமுக - விசிக மோதல்..! கற்கள், கட்டைகளால் தாக்குதல்!
01:26Breaking: தூத்துக்குடி மாணவி சம்பவம் ! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடி !
03:53கோட்டையை ஆளப்போகும் 'உச்ச குரு': ஜூன் 2-ல் நடக்கும் மேஜிக்!
03:58TVK-வை நோக்கி நகரும் அதிமுக தொண்டர்களின்.. ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி! | Aadhav Arjuna
02:32நேற்று 3.. இன்று 5 .. அதிமுகவில் அடுத்து ராஜினாமா செய்யப்போகும் எம்எல்ஏக்கள் யார் தெரியுமா?
03:50Crop Loan | பயிர்க்கடன் தள்ளுபடி வந்தாச்சு..! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு லிஸ்ட் இதோ!
05:21தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்த இ.பி.எஸ் அணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
Read more