டாஸ்மாக்கில் அரிவாள் கொண்டு தாக்கிய நபரால் பரபரப்பு.. வெளியான சிசிடிவி காட்சி

டாஸ்மாக்கில் அரிவாள் கொண்டு தாக்கிய நபரால் பரபரப்பு.. வெளியான சிசிடிவி காட்சி

Published : Oct 27, 2022, 02:56 PM ISTUpdated : Oct 27, 2022, 05:52 PM IST

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் பாருக்குள் நுழைந்த  வாலிபர் ஒருவர் திடீரென்று பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பான  சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன
 

பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது அருந்து கொண்டிருந்த செட்டிகுளத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்பவரிடம், அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டாக வந்து திடீரென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது திடீரென கிருஷ்ணகுமார் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரிராஜை வெட்டினார். இதனை தடுக்க வந்த மாரிராஜின் நண்பர் மாயாண்டி என்பவருக்கு மார்பு பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது.பின்னர் அங்கிருந்த நாற்காலி, மேஜை தூக்கி வீசி உடைந்து, சுற்றி இருந்தவரை அரிவாளால் தாக்க முற்பட்டார்.  இதனைதொடர்ந்து எதிர் தரப்பில் கல்லைக் கொண்டு தாக்கியதில், கிருஷ்ணகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் படிக்க:Viral Video : தாம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை! மக்கள் பீதி!

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுக்குறித்து வழக்கு பதிந்து தாக்கலில் ஈடுபட்ட கிருஷ்ணகுமாரின் நண்பர்கள் ரஞ்சித் , பிரபாகர், பீட்டர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க மருத்துவமனையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கிருஷ்ணகுமார் அரிவாளால் கொண்டு தாக்குவதும், அங்குள்ள மேஜை, நாற்காலிகளை தூக்கி போட்டு உடைப்பதும் பதிவாகியுள்ளது. 

மேலும் படிக்க:கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் அதிரடியாக களத்தில் குதித்த சிபிசிஐடி

05:07அடுத்த கட்டத்திற்கு தயாராகும் தனுஷ்..! பிறந்தநாளில் மாஸ் சர்ப்ரைஸ் ! விஜய் வழியில் அரசியல் ஆட்டம் !
03:36Tasmac: 'குடி'மகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் பார்களில் அதிரடி மாற்றம்! முழு விவரம்!
02:22சென்னை குடிநீர் வாரிய திட்டப் பணிகள்: கோயம்பேட்டில் முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் திடீர் ஆய்வு!
06:11சென்னையில் பாமகவின் 24-வது நிழல் வரவு செலவுத் திட்டம் வெளியீடு ! அன்புமணி ராமதாஸ் பேட்டி
04:58கோவை மெட்ரோ திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்!
06:06பருவமழை முன்னேற்பாடு: கூவம் ஆற்றில் நடக்கும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் என். ஆனந்த்!
07:27மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
03:10களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல!
08:21தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர முடியாது ! - மேகதாட்டு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி
07:04தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி