ஆடிப்பெருக்கில் ஆத்தோடு அடிச்சுட்டு போன அப்பா-மகன்..! அலேக்கா தூக்கி முதலுதவி செய்து உயிர் பிழைக்க வைத்த ஹீரோயிசம் காட்சி..!

Aug 3, 2019, 6:06 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆற்றங்கரையில் ஆடி பெருக்கை முன்னிட்டு ஆற்றங்கரையில் பெரும் திரளான பக்தர்கள் நீராடி மகிழ்ந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அப்பா, மகன் இருவரும் ஆற்றோடு சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டனர். உயிருக்கு போராடிய இருவரையும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு துறையினர் தந்தை மற்றும் மகனை மீட்டு உடனடியாக முதலுதவி செய்து இருவரின் உயிரையும் காப்பாற்றினர்.