
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கடுமையாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழை குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. அதாவது அடுத்த 48 மணி நேரத்தில் ஒடிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.