மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் பாராளுமன்ற தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டால், தமிழ்நாடு 10க்கும் மேற்பட்ட இடங்களை இழக்க நேரிடும். அதேசமயம் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் அதிக இடங்களைப் பெறும்.பொறுப்பான நிர்வாகத்திற்கான வெகுமதிகளைப் பெறுவதற்குப் பதிலாக, நமது அரசியல் குரல் குறைக்கப்படும் என்று இப்போது நமக்குச் சொல்லப்படுகிறது. மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை நிர்ணயம் செய்ய முடியாது. இது ஒரு மாநிலத்தின் பொருளாதார பங்கீடு, ஆட்சியின் தரம் மற்றும் கூட்டாட்சி சமத்துவத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் இவ்வாறு கனிமொழி கூறினார்